ஞாயிறு, 20 டிசம்பர், 2015

ஸ்ரீ தேவ கன்னிகா மஹா மந்திரம்

தியானம்: 
  மின்னலை யொத்த திருமேனி அழகும் இரண்டும் கரங்களில் பாரிஜாத மலரும் வெண்மையான ஆடையும் நவரத்ன கிரீடமும் தரித்து புன்முறுவலுடைய முக மண்டலமும் ஆகிய மோகன வடிவமான தேவ கன்னிகையை துதிக்கிறேன்.....
                
                   
                      

மூல மந்திரம்:
                       "ஓம் க்லீம் நமோ பகவதி சுரலோகவாகினி சர்வலோக வஸங்கரி க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஓம் சுர சுந்தரி தேவ கன்னிகாயை ஸ்வாக"

பூஜை முறைகள் :
                    பால் ,பழம் ,தேன்,வாசனை திரவியம் , சர்க்கரை பொங்கல், முதலியன வைத்து கணபதியை வணங்கி வடக்கு முகமாக அமர்ந்து 1008 உரு வீதம் 40 நாட்கள் ஜெபிக்க மந்திரம் சித்தியாகி தேவி பிரசன்னமாகும்..

இதன் பலன் :
                         முக்காலமும் சொல்லும் அஷ்டகர்மமும் சித்தியாகும். அறுபத்துநாலு சித்துகளும் ஆடலாம். மேலும் ஜால வித்தைகள், மை முறைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.... 


                     பகிர்வில் ர.சடகோபால்.BA   





  

வெள்ளி, 18 டிசம்பர், 2015

ஐந்தெழுத்து மந்திரம்

எல்லா அஞ்செழுத்தும் அஞ்சுமு கமாக 
 ஏகமாய் ஒரு நூற்று இருபத்தஞ்சாய் 
எதிரில்லா விஞ்சையாய்க் கலைக்கியானமாகி
 இதமதிதம் இரண்டுக்கும் முன்னேயாகி 
எதிரில்லாத் தோற்றுவித்து எழுவகையுமாகி
 எழுவகையின் தோற்றத்தில் லோகமாகி 
எதிரில்லா மந்திரத்தின் மகிமைதனை 
 எண்ணுகிறேன் ஒவ்வொன்றுக்கு இருபத்தஞ்சே 

"நமசிவாய" என்ற ஐந்தெழுத்தை ஐந்து முகமாக பிரித்து பார்க்க இருபத்தைந்தாம்.இதை ஐந்து முகமாக பார்க்க (25*5) நூற்று இருபத்தைந்தாகும். இதற்கு சமமான மந்திரங்கள் இல்லை எனலாகும். 
ஏழுவகை தோற்றமும் ஏழுவகை தோற்றத்தில் உருவான உலகமும் இதில் அடங்கும். 

அஞ்சுமுகமும் ஒவ்வோன்றுக்கு இருபத்தஞ்சும் 
 அறுபத்து நாலு சித்தும் ஆடி நிற்கும் 
பஞ்சமுக மாயிருந்த பூரணத்தைச் சேர்க்கும் 
 பராபரனாம் வாழ்நாளும் ஆறுதலம் பாயும் 
துஞ்சாது ஒருநாளும் வளர்ந்து தோன்றும்
 சுத்தருக்கு இந்தமுறை தொடர்ச்சியாகும் 
பிஞ்சாகும் காயாகும் பூவுமாகும் 
 பேசரிய பலகோடி அண்டமாமே ...
                                                                  - கருவூரார்                                                        

ஐந்து முகம் ஒவ்வோன்றிக்கும் இருபத்தைந்து அட்சாரமாகும் இதனால் அறுபத்து நான்கு சித்துகளும் உண்டாகும். இதுவே பூரணம் என்ற முழுமையை உண்டாக்கும் பராபரனான வாழ்நாளில் ஆறுதலமும் பாயும் ஒவ்வொரு நாளும் வளர்ச்சியே அன்றி குறைகள் வராது.
சுத்தமான மனது உடையவருக்கு இந்த முறை நன்மை அடைய செய்யும் .
பிஞ்சாகி,காயாகி,பூவுமாகும் . பலகோடி அண்டத்திற்கு மேலானது "நமசிவாய" எனும் ஐந்தெழுத்து..... 


                               பகிர்வில் ர.சடகோபால்.BA 
















       

பகவதி மந்திரம்

கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ளது உலகப்புகழ் பெற்ற 
பகவதியம்மன் கோவில். இக்கோவில் சுமார் 3000 ஆண்டுகள்
 பழைமை வாய்ந்தது. பரசுராமர் இக்கோவிலை நிர்மாணித்ததாக
 வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இங்கு நாள்தோறும் நாட்டின்
பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இச்சிறப்பு மிக்க கோயிலில் உறைந்துள்ள பகவதியம்மன் மந்திரத்தை இன்றைய பதிவில் காண்போம்.




பகவதி மந்திரம்
பாரப்பா இன்னமொரு தீச்சைமார்க்கம்
பத்தியுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
நேரப்பா பகவதியாள் தியானந்தன்னை
நேர்மையுடன் சொல்லுகிறே நிசமதாக
சாரப்பா தன்சார்பு நிலையில்நின்று
சங்கையுடன் ஓம் றீங் அங்கென்றேதான்
காரப்பா புருவ நடுக்கமலத்தேகி
கருணையுடணாயிரத்தெட்டுருவே செய்யே.

செய்யடா மானதமாயுருவே செய்யத்
திருயுருவாய் நின்றபகவதியாள்தானும்
மெய்யடா உனதிடமாய் நிருத்தஞ்செய்வாள்
பண்ணப்பா இதுசமயமென்று நீயும்
பகவதியாள் விபூதியை நீதரித்துக்கொள்ளே.

கொள்ளடா விபூதியை நீதரித்துக்கொண்டு
குணமாகப் பகவதியைத்தியானம் பண்ணி
நில்லடா உன்முகங்கண்டோருக்கெல்லாம்
நீங்காத பாவமெல்லாம் நீங்கிப்போகும்
சொல்லடா உன்வசனம் நன்மையாகும்
சோதிதிருப்பகவதியாள் சுருக்கினாலே
அல்லடா உன்மனதை நோகப்பண்ணும்
அவர்கள்குடி செந்தீயிலழுந்துப்பாரே.
                           -அகத்தியர் பரிபூரணம்1200

பொருள்:
பகவதியின் தியானத்தை சொல்கிறேன் கேள்,
மனஓர்நிலையோடு புருவமையத்தில் மனதை குவித்து'ஓம் ரீங் அங்" என்று
1008 உரு செபிக்க மந்திரம் சித்தியாகும்.இம்மந்திரதை சித்தி செய்தவரின் உள்ளத்தில் பகவதி இருந்து இவர்கள் செய்யும் 
சகல காரியங்களும் இவர்களுக்கு சித்தியாகும்படிசெய்வாள். விபூதியை பூசிகொண்டு இம்மந்திரத்தை தியானம் பண்ணி 
 செல்ல உன் முகம் பார்க்கும் யாவரின் பாவங்களும் விலகிவிடும்.  நீ சொல்வதெல்லாம் பலிக்கும். உனது சகலபாவங்களும் விலகிவிடும். 
உன் மனதை எவனாவது நோகடித்தால் அவன் குடும்பம் அழிந்துபோய்விடும் என்கிறார் அகத்தியர்.

மேலும் அகத்தியர் தனது வாதசௌமியம் என்னும் நூலிலும் 
இம்மந்திரத்தை பற்றி சொல்லிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இம்மந்திரத்தினால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை.
சகலமும் சித்தியாகும்.செல்வம் பொழியும்.
எடுத்த காரியமெல்லாம் ஜெயமாகும். நினைத்தபடி முடியும்.
ஆபத்து வராது, வல்வினைகள் அகன்றுவிடும். இம்மந்திரம்
கோடானகோடி பூசைசெய்ததற்கு ஒப்பாகும் என்று 
வாதசௌமியத்தில் கூறியுள்ளார் அகத்தியர்.

     
                   பகிர்வில் ர.சடகோபால்.BA 

வசிய வீபூதி

கிருபையுள்ள புலத்தியனேவ  சியமென்று 
 கெணிதமுடன் சொல்லுகிறே நன்றாய் கேளு 
துருவமுள்ள வுருத்திரபூமி யிலே சென்று 
 சுகமாக வெந்த அஸ்த்திநீயே டுத்து மைந்தா
அருவமுள்ள அஸ்தியுடன் விஷ்ணு மூலி 
 ஆதிசத்தி தன்னுடைய வேருங்கூட்டி க் 
கருவையினிச் சொல்லுகிறேன்க லசப் பாலாற்
 கருணையுடன் றானரைத்தே யுண்டை செய்யே 

 புலத்தியனே வசியமுறை ஒன்றை கூறுகிறேன் கேட்பாயாக. சிவனின் பூமியாகிய சுடுகாட்டிற்க்கு சென்று நன்கு வெந்த அஸ்தியை எடுத்துகொள் அத்துடன் விஷ்ணு கிரந்தியின் வேரினை கூட்டி தாய்பால் விட்டரைத்து உருண்டை செய்து வைக்க வேண்டும்..

செய்யடா உருண்டைதனையு லர வைத்துச்
 செம்மையுட னெருவடுக்கிப் புடத்தைப்போடு 
மெய்யடா சொல்லிகிறே நீறிப் போகும் 
 வேகாந்த மானதொரு நீற்றை வாங்கி 
வையடா சவ்வாதுடனேபு  னுகு சேர்த்து 
 மார்க்கமுடன் அங்கெனவெ லட்ச மோதி 
மையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி 
 மார்கமுடன் அரசாரிடன்சென்று பாரே 

இவ்வாறு செய்த உருண்டையை நன்கு உலரவைத்து நன்கு எருவடுக்கி புடத்தை போட வேண்டும் புடம் போட்டு வெந்த நீற்றை எடுத்து சவ்வாது ,புனுகு ஆகியவற்றை கூட்டி முறையாக "அங் " என்று ஒரு லட்சம் உரு ஓதி அரசரிடம் சென்று பார் ......

சென்றுமிக நின்றுடனேயி ராச மோகம் 
 சிவசிவா செகமோகம் ஸ்ரீவ சியமாகும் 
அண்டர் பிரானருள் பெருகிவசிய முண்டாம் 
 அப்பனே ஓம் கிலியு றீயு மென்று 
பண்டுபோலி லட்சமுரு வெற்றிப் பின்னர் 
 பாலகனே லலாடமிசைப் பூசிச் சென்றால் 
தொண்டரென்றே சத்ருக்கள்வ ணங்கு வார்கள் 
 துஷ்டனென்ற மிருகமெல்லாம்வ  சிய மாமே ...
                                                                               -அகத்தியர் பரிபூரணம் 

அவ்வாறு சென்றவுடன் ராஜவசியமாகும். அதுமட்டுமல்லாது செக வசியமும் பெண் வசியமும் உண்டாகும். சிவன் அருள் பெருகி அனைத்தும் வசியமாகும். 
முறையாக அமர்ந்து "ஓம் கிலிறீ" என்று லட்சம் உரு கொடுத்து விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டால் எதிரிகள் உன்னை வணங்குவார்கள். துஷ்ட மிருகமெல்லாம் வசியமாகும் ...

           
               பகிர்வில் ர.சடகோபால்.BA  


 





ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

ஸ்ரீ புவனேஸ்வரி தேவி மஹா மந்திரம்

த்யானம்  
                  இளஞ்சுரியனை போன்று பிரகாசிப்பவளும் சந்திரனைக் கிரீடத்திலணிந்தவளும் உயர்ந்த நகில்களையுடைய வளும் பூத்த முகமுடையவளும் வர முத்திரை,பாசம்,அங்குசம்,அபய முத்திரை ஆகியவற்றை  கரங்களில் தரிப்பவளும் ஆகிய புவனேஸ்வரி தாயை த்யானம் செய்கிறேன் .



மூல மந்திரம் :
                                   "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி புவனேஸ்வரி ஸ்ரீம் ஹ்ரீம் ஹம் நம ஸ்வாகா"  

பூஜை முறைகள் :
                                   பால்சாதம் ,தேன்,கற்கண்டு,வாசனை திரவியம் ,மல்லிகை மலர் போன்றவை வைத்து 21 நாள் 1008 முறை ஜெபிக்க தேவி தரிசனம் கிடைக்கும்....

இதன் பயன் :
                           முக்காலமும் உணரலாம் வசியம்,மோகனம்,சித்தியாகும். எப்பேற்பட்ட நோய்களுக்கும் விபூதி போட குணமாகும் 


                      பகிர்வில் ர.சடகோபால்.BA 

சனி, 26 செப்டம்பர், 2015

வசிய மை

 போக்கான இன்னமொருவ சியங்கேளு 
 புகழ்பெரிய ஆவின்கொரோச னம்கற் பூரம் 
வாக்கான கண்டனிட மூலி வேரும் 
 மகத்தான சந்தனமும்பு னுகுங் கூட்டி 
தாக்கான மந்திரம் ஓம் ரீங் வசி 
 சர்வமோகி னிவசிய மென்றே யோது 
தேங்கான தில்லைநடமாடும் போல செய்து 
 வெல்லாநீ தேடிநின்றுக தரும் பாரே 
                                                                        அகத்தியர் பரிபூரணம் 400
பொருள்:
                  இன்னுமொரு வசியத்தை கேட்பாயாக, கோரோசனம் கற்பூரம் விஷ்ணு கரந்தை வேர்,சந்தனம்,புனுகு அத்தனையும் கூட்டி மை போல அரைத்து வைத்து கொள்ளவும், பிறகு "ஓம் ரீங் வசி சர்வ மோகினி வசிய " என்று ஓதினால் இவ்வுலகில் அனைத்தும் வசியமாகும்..


          பகிர்வில் ர.சடகோபால்.BA 



சக்தி சாரணை

 பொற்றியென்ற சக்திசா ரணையை வாங்கப்
 பொருந்தியதொர் சங்கரம நாளில்சென்று 
ஊற்றியென்னும் நூல்கட்டி மந்திரந்தான் 
 உரைத்திடவே ஓம்பரமா பரமானந்தி 
மாற்றி மகா சக்தி கமல வல்லி 
 மாதாவே என்று சொல்லி சமூலம் வாங்கி  
நெற்றியெனும் பொடியாக்கி நித்தங்கொள்ள
நிலைத் தெந்த ஆயுதமும் தைத்திடாதே 
                                                                           -கருவூரார் 
பொருள்:
                  சக்தி சாரணையை எடுக்க சங்கரம நாளில்  சென்று நூலால் காப்பு கட்டி ."ஓம் பரமா பரமானந்தி மகா சக்தி கமலவல்லி மாதாவே " என்று மந்திரம் சொல்லி சமுலமாக எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் உண்ண,எந்தவித ஆயுதமும் உடலில் தைக்காது [உடலில் ஆயுதம் பாயாது]


                  பகிர்வில் ர.சடகோபால்.BA 
  

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

பாதாள அஞ்சனம்

பாதாள அஞ்சனம் என்பது புதையல் எடுக்க பயன்படுவது ஆகும். 
குப்பைமேனி வேர்              வெள்ளைசாரனை வேர் 
வெள்ளெருக்கன் வேர்       வெள்ளைகாக்கணம் வேர் 
வெள்ளைவிஷ்ணு காந்தி வேர் 

இவை ஐந்தையும் முறை படி காப்பு கட்டி சாபம் போக்கி ஆணிவேர் ஆறாமால் பிடுங்கி, தீயில் கறுக்கி எடுத்து வைத்துகொண்டு ஒரு கோட்டானை பிடித்து உரோமம்,குடல் போக்கி குழித்தைலம் எடுத்து, மேல் கண்ட மூலிகை வேரை கல்வத்திலிட்டு இரண்டு சாமம் கோட்டன் தைலம் விட்டு அரைக்க வேண்டும். அதன் பிறகு புனுகு,கோரோசனம்,பச்சைகற்பூரம்,குங்குமபூ ,கஸ்துரி இவைகளை வகைக்கு ஒரு குன்றிமணி சேர்த்து ஒரு சாமம் அரைத்தால் மை பக்குவம் அடையும். மை பக்குவம் அடந்ததை தெரிந்துகொள்ள கல்வத்தின் அடியில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு அரைக்க அது மையில் தெரியும்..

இதற்கு பூஜை மந்திரம் எதுவும் நான் இங்கு கூறவில்லை. இதை ஒரு பகிர்வாக மட்டுமே பகிர்கிறேன்....


                        பகிர்வில் ர.சடகோபால்.BA 

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

பிறையதிக சித்து

பாரப்பா இன்னுமொரு சேதிகேளு 
 பண்பான பிறையதிகச் சித்து சொல்வேன் 
காரப்பா திகைப்பூண்டு தனைக்கருக்கி 
 கருவான ஏரண்டத் தெண்ணைவிட்டு 
வீரப்பா செய்யாமல் கல்வத்தாட்ட
 விபரமுள்ள மைபோல வெளிச்சம் காணும் 
சேரப்பா சிமிழ்தனிலே பதனம்பண்ணித் 
 திருவான பதிநோக்கித் திலகம் போடே 


போட்டவுடன் அமாவாசை இருட்டில் மைந்தா 
 போக்குடனே நாலு திக்கும் பார்த்தாயானால் 
நாட்டமுடன் பிறையதிக மாகத் தோன்றும் 
 நாரான மானிடர்க்கு அப்படியே காணம் 
வாட்டமுடன் இடது கண்ணை மூடிப்பார்த்தால் 
 வளமான சூரியன் போல் வரிசை காணும் 
காட்டாதே உலகிற்க்கு இந்தநூலை 
 கர்தவிதி தீர்த்தவர்க்கு காட்டு காட்டே 
                                                                           - அகத்தியர் 64 சித்துகள் 

பொருள்:
                     திகை பூண்டை கருக்கி ஏரண்டதென்னை விட்டு  கல்வத்திலாட்ட  அது மை போலாகும். அதை ஒரு சிமிழில் பதனம் பண்ணவும். அம்மாவசை இரவில் அந்த மையை எடுத்து திலகமிட நாலு திசைகளும் வெளிச்சமாக தோன்றும். இடது கண்ணை மூடி வலது கண்ணில் பார்த்தால் சூரிய வெளிச்சத்தில் பார்ப்பது போல தெரியும்...  இதுவே பிறையதிக சித்துவாகும் 


                          பகிர்வில் ர.சடகோபால்.BA 
  

ஸ்ரீ சித்த வித்யா யட்சணி தேவி மஹா மந்திரம்

ஸ்லோகம்: 
                          ஸ்ந்த்யா கால சூரியனைப் போன்றவளும் திக்குகளை பிரகாசிக்கும் ஒளி உடையவளும் சிவந்த ஆடை அணிந்தவளும் நவரத்ன கிரீடம் சூடி வரதம் எனும் முத்திரையுடன் கூடிய ஸ்ரீ சித்த வித்யா யஷணி தேவியை வணங்குகிறேன்.


மூல மந்திரம்: 
                              "ஓம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஸௌம் நமோ பகவதி பகவதி யஷ குல ப்ரமுகி சித்த வித்யா யஷணியை மமவசம் குருகுரு ஸ்வாஹா...."

நிவேதனம் :
                              பால், பழம்,தேன், கற்கண்டு, சுண்டல், வடை இவைகளை நிவேதனமாக கொண்டு மல்லிகை மலரால் பூஜை செய்து மூல மந்திரத்தை 1008 உரு வீதம் 27 நாட்கள் ஜெபிக்க தேவி தரிசனம் கிடைக்கும் ...

பயன்கள் :
                      பலவித தேவைகளை அடுத்த நல்லவர்கள் மூலமாக நடத்திவைக்கும். முக்காலமும் சொல்லும், மற்றும் வசியம், மோகனம் சித்தியாகும் 


                                    பகிர்வில் ர.சடகோபால்.BA 

திங்கள், 13 ஜூலை, 2015

வெற்றிலையில் மை

"பாரப்பா நிலவானை மலைகள் தோறும்
பண்பாகத் தானிருக்கு மறிந்து பாரு
வாரப்பா வதினுடைய விரையைத் தானும்
வளமாகப் பத்துபல மெடுத்து வந்து
சீராப்பா தலைமஞ்சள் கொடியு மாவுஞ்
சிறப்பாக முப்பாக முப்பூவும் வராகள் கூட்டித்
தேரப்பா வில்லைதட்டி யுலரப் போடு
திறமாக யுலர்த்தியதைத் தயிலம் வாங்கே."

- புலிப்பாணி -

மலைகளில் நிலவாகை என்று ஒருவகை செடி வளர்ந்திருக்கும், அந்த செடியைக் கண்டு பிடித்து அதன் விதையில் பத்து பலம் எடுத்து அதனுடன் தலைமஞ்சள் கொடியின் மாவு ஒரு விராகனும், முப்பூ ஒரு விராகனும் சேர்த்து நன்றாக அரைத்து வில்லைகளாகத் தட்டி அந்த வில்லைகளை நன்கு உலரவைத்து பின்னர் அதில் இருந்து குழித்தைலம் இறக்கி எடுத்துக் கொள்..

"வாங்கியே ஆள்காட்டி முட்டை தன்னை
வளமான சிற்றண்டத் தயிலம் போலே
தாங்கியே வாங்கியந்தத் தயில நேரே
தயவாகத் தானெத்துச் சிமிழிதனில் வைத்து
ஓங்கியே களவுமுதற் சூன்யம் யாவும்
உற்றுப்பார் தோற்றுமடா கள்ள மெல்லாம்
நீங்கியெ யதுகண் பிடித்துக் கொண்டு
நினைவாகக் குருபாதம் பணிவாய்த் தானே"

- புலிப்பாணி -

ஆள்க்காட்டி என்ற குருவியின் முட்டைகளைக் கொண்டு சிற்றண்டத்தைலம் போல தைலம் இறக்கி, அந்த தைலத்துடன் முன்னர் செய்த குழித் தைலத்தையும் சம அளவில் கலந்து சிமிழ் ஒன்றில் சேமித்து வைத்தல் வேண்டும்.

களவு போனாலோ அல்லது யாராவது சூனியம் செய்வினை போன்றவை செய்தாலோ அவற்றை செய்தவர் யார் என்று அறிய ஒரு வெற்றிலை ஒன்றை எடுத்து அதில் சிமிழில் சேமித்த தைலத்தில் சிறிது எடுத்து தடவி குருநாதரை நினைத்து வணங்கி பார்த்தால் திருடியது, சூனியம் செய்வினை ஏவல் செய்தது யார் என்று அதில் தெளிவாகத் தெரியும் என்கிறார் புலிப்பாணி.



               பகிர்வில் ர.சடகோபால்.BA 


ஞாயிறு, 12 ஜூலை, 2015

கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்க கூடாது ஏன்?

ஆண் பெண் எல்லோரும் நெற்றியில் பொட்டு வைப்போம். அதாவது இரண்டு புருவங்களுக்கு மத்தியல் நாம் உயிர் ஓட்டத்தை தூண்டும் ஆக்கினை என்னும் மையம் உள்ளது . அதை தொட்டு தூண்டும் பொருட்டும் அங்கே உருவாகும் வெப்பதை கட்டுபடுத்தும் பொருட்டும் ஆண் பெண் எல்லோரும் அங்கே பொட்டு வைபோம்.

இது எல்லோரும் கடைபிடிக்கும் சம்ப்பரதாய முறை , ஆனால் திருமணமான பெண்கள் திருமணத்திற்கு பிறககு இரண்டாவதாக ஒரு பொட்டு வைப்பார்கள் அது தான் நடு நெற்றி வகுடு , இந்த இடத்தில தினமும் பெண்கள் தொட்டு, பொட்டு வைப்பதால், அவர்களின் உடலில் அவர்களுக்கே தெரியாமல் சில மாறுதல்கள் ஏற்படுகிறது. சில சுரபிகள் தூண்டபடுகிறது.
பெண்களுக்கு நெற்றி வகுடுவில் தினமும் தொடுவதால் அவர்களுக்கு அடி வயற்றில் பாலியல் சுரப்பி நன்கு தூண்டபடுகிறது. அதே போல் கர்ப்பபையும் வலு பெறுகிறது . திருமணத்திற்கு பின் பெண்களுக்கு உடலுறவில் நல்ல ஆர்வமும் கர்ப்பபை வலு பெறவேண்டும் என்பதற்காக தான் நெற்றி வகுடுவில் பொட்டு வைக்கும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைதுள்ளனர்.
மேலும் சீமந்தம் , ஐந்து அல்லது எழாவது மாதம் வளைகாப்பு வைத்து செய்யும் போது எல்லோரையும் கூப்பிட்டு நெற்றி வகுடுவில் பொட்டு வைத்து தொட்டு ஆசிர்வாதம் செய்ய சொல்கிறார்கள், இதனால் கர்பப்பை வலுபெறுகிறது .கர்பப்பை வலுபெற்றால் குறை பிரசவம் உண்டாகாது . நிறை மாதமாக இருக்கும் போது சுகபிரசவம் ஏற்படும் .
ஆனால் கணவரை இழந்துவிட்ட பெண்ணிற்கு பாலியல் சுரப்பி தூண்ட படாமல் இருபதற்காக கணவரை இழந்த பெண்கள் நெற்றி வகுடுவில் உள்ள பொட்டை வைக்க வேண்டாம் என்று சொல்லி விட்டு சென்றனர். ஆனால் பின்னால் வந்தவர்கள் அந்த விஷயம் தெரியாமல் பொட்டே வைக்க கூடாது என்று மாற்றி விட்டனர் , ஆனால் இருபுருவ மத்தியில் உள்ள பொட்டு ஆண் பெண் எல்லோரும் எல்லா நாளும் வைக்கலாம்..

                பகிர்வில் ர.சடகோபால்.BA 

சனி, 2 மே, 2015

நெருப்பு வித்தை

மானப்பா மணத்தக்காளி சாறுகூட 
 மைந்தனே உத்தமாணியின் சாறுகூட்டி 
வானப்பா வசலையின் சாறுசேர்த்து
  வளமாக மத்தித்து வைத்துக்கொண்டு 
தானப்பா கைகாலில் தடவிக்கொண்டு 
  தன்மையாய் தணல்மிதிக்க தணலும் நீர்போல் 
ஏனப்பா யவ்விதமே செய்தாயானால் 
  இதமாகத் தணலதுவுந் தயங்குந்தானே...
                                                                               -புலிப்பாணி சித்தர் 

பொருள்: 
                       மணத்தக்காளி சாறும்,உத்தாமணி சாறும்,வசலை சாறு இம்மூன்றையும் ஒன்றாக கலந்து கைகளில் பூசி நெருப்பை எடுக்கவும்,அல்லது கால்களில் பூசி நெருப்பை மிதிக்கவும், கை கால்கள் சுடாது... நெருப்பானது நீர்போல இருக்கும். எந்த நேரம் விளையாடினாலும் விளையாடலாம்....

       
                பகிர்வில் ர.சடகோபால்.BA  





  

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

சிவ மந்திரம்


செய்யப்பா சிவத்தினுட மந்திரந்தான்கேளு 
 சீரான யென்மகனெ கண்ணே சொல்வேன் 
செய்யப்பா தெங்கென்றுங்க் கிலிவா வென்றும் 
 செயங்கொள்ளாப் பிரபஞ்சம் வாவா வென்றும் 
கையப்பா ஐயுமேன்றும் ஸ்ரீறீங் கென்றும் 
 காமனையுந் தான்வென்ற ஈஸ்வராவாவா 
நொய்யப்பா நூற்றெட்டு உருவேயானால் 
 நோக்குமுன்னே சிவனங்கே வருவார் பாரே.
                                                                                    - கருவூரார் 
பொருள்: 
                   சிவ மந்திரத்தை கேள்.  "எங் கிலி வா செயங் கொள்ளா பிரபஞ்சம் வாவா" என்று  108 உரு ஜெபித்தால் நீ எதிர் பார்க்கும் முன்னே சிவன் உனக்கு துணையாக வருவார். 

                       பகிர்வில் ர.சடகோபால்.BA  

திங்கள், 13 ஏப்ரல், 2015

ஸ்ரீ வன துர்கா தேவி மஹா மந்திரம்

தியானம் 
               நீல மேனியும் முக்கண்ணுடைய முக மண்டலமும் நவரத்ன கிரீடத்தில் பிறை சந்திரனை தரித்து சிம்ம வாகனத்தில் அமர்ந்து எட்டு கரங்களில் சங்கு,சக்கரம்,திரிசூலம், டமருகம்,முசலம்,கேடயம்,அபயவரதம் தரித்து பாரிஜாத வனத்தில் பலகோடி யோகினி கணங்களுடன் கூடிய வனதுர்கா தேவியை வணங்குகிறேன்.
         
மூல மந்திரம்:                      
               "ஓம் ஹ்ரீம் தும் ஜ்வல ஜ்வல தூம்ர லோஷினி சண்ட ஸம் ஹாரி 
ஐம் ஹ்ரீம் க்லீம் நமோ பகவதி வன துர்க்காயை ஹீம் பட் ஸ்வாஹா"

பூஜை முறைகள் 
                                  வெள்ளிகிழமை அன்று வனத்தில் அமர்ந்து கொண்டு ஜெபம் செய்ய ஆரம்பிக்க வேண்டும். பால்,தேன்,பொங்கல்,வடை,சுண்டல், வைத்து நிவேதனம் செய்து பூஜை செய்ய வேண்டும். செவ்வரளி புஷ்பம் பூஜைக்கு சிறந்தது. 1008 உரு வீதம் 9 நாட்கள் செபம் செய்ய வேண்டும்.

இதன் பயன் 
                          இந்த மந்திரம் சித்தியானால் உலகில் உள்ள பேய்,பிசாசு,பூதம் எல்லாம் பயந்து ஓடும். அஷ்டகர்மமும் சித்தியாகும். முக்காலமும் உணரலாம். சத்ருக்கள் அடங்கி போவார்கள். மேலும் இந்த மந்திரத்தை சித்தி செய்தவர்களை உலகிலுள்ள எந்த தீய சக்தியாலும் ஒன்றும் செய்ய முடியாது.


                            பகிர்வில் ர.சடகோபால்.BA    






செவ்வாய், 7 ஏப்ரல், 2015

மூலிகை ஜாலம்

பாடினே நின்னுமொரு ஜால வித்தை 
 பண்பாக சொல்லுகிற நன்றாய் கேளு 
ஆடியே இருளென்ற மூலி தன்னை 
 அப்பனே காப்பிட்டு பிடுங்கி வேரை 
நாடியே காதிலே வைக்கும் போது 
 நலமாக ஒரு பொருளை சொல்லி வைத்தாற் 
கூடியே யவ்வண்ண ரூபமாகும் 
 குணமாக வதன் பெருமை கூறக்கேளே 

கேளடா புலியாவாய் கரடி யாவாய் 
 கெடிதான குரங்காவாய்  மந்தியாவாய் 
நாளடா யெருமைமுத லெருதாவாய் 
 நலமான ஆனையோடு நாயுமாவாய் 
ஆவாய் நீ யாணாவாய் பெண்ணுமாவாய் 
 அப்பனே   ராஜனோடு குருவுமாவாய் 
தாவியே சித்தரென்ற முத்த ராவாய் 

ஆமப்பா இச் ஜால சுருக்கு மெத்த 
 ஆரறிய போகிறா ரருமை மெத்த 
காமப்பா புண்ணியருக் கெய்தும் பாரு 
 கன்மிகளுக் கென்னாலும் காணாதப்பா 
வாமப்பா போகருட கடாஷத் தாலே 
 வளமாக புலிப் பாணி பாடினேனே...
                                                                        - புலிப்பாணி ஜாலத்திரட்டு 
பொருள்:
                           இன்னும் ஒரு வித்தையை சொல்கிறேன் கேள், இருளி யென்ற மூலிகைக்கு காப்பு கட்டி அதன் வடக்கே போகும் வேரை எடுத்து பத்திரப் படுத்திக் கொள்ளவும், அந்த வேரை காதில் வைத்து கொண்டு என்ன நினைக்கிறாயோ அதுவாகவே மாறலாம்.  
வேரை காதில் வைத்து நீ புலியாக வேண்டும் என நினைத்தால்  உருவம் பிறர் கண்களுக்கு புலியாக தெரியும். இப்படி காதில் வைத்து எந்த மிருகமாகவும் மாறலாம்.  ஆணும் ஆகலாம், பெண்ணும் ஆகலாம், ராஜாவாகவும், சித்தனாகவும் மாறலாம்.  
 இப்படி பட்ட இந்த மூலிகை பாவிகளுக்கு கிடைக்காது. இது போகரின் ஆசிர்வாதத்தால் புலிப்பாணியாகிய நான் பாடினேன்.


                      பகிர்வில் ர.சடகோபால்.BA  
                   

சனி, 4 ஏப்ரல், 2015

அஞ்சனம்

ஜோதி விருட்சத்தின் வேர், அதன் பிசின், கஸ்தூரி, குங்குமப்பூ, கோரோசனை,பச்சைக் கற்பூரம்,புனுகு இவை வகைக்கு
 ஒரு குன்றி எடுத்து கல்வத்திலிட்டு, ஜோதி மர பட்டையின் குழித்தைலம் விட்டரைத்து , மைபோல் ஆனதும் எடுத்து கொம்பு டப்பியில் வைத்துப் பதனம் செய்யவும். ஜோதி மரத்தின் வேரை ஒரு புது சட்டியில் போட்டு கருக்கிக் கூட்டவும். ஜோதி மரத்தின் பட்டையை உலர்த்தி ஒரு மண்பானையில் போட்டு மேல் மூடி, சீலை மண் செய்து குழித்தைலம் இறக்கவும். இந்த மையை அஞ்சனா தேவி மூல மந்திரம் 1008 உரு ஜெபம் செய்து, ஒரு வெற்றிலையில் தடவி பார்த்தால் வெகு தூரத்தில் நடப்பதையும் காணலாம். இது தூர திருஷ்டி அஞ்சனம் எனப் பெயர்.

அஞ்சனா தேவி மூல மந்திரம்
                                                    " ஓம் ஸ்ரீம் ஷ்ரீம்  ஐம் க்லீம் நமோ பகவதி அஞ்சனாதேவி மஹா சக்தி சௌம் க்லீம் ஸர்வார்த்த ஸாதகி சர்வ ஜீவ தயாபரி மமகார்யம் ஸாதயா ஹீபட் ஸ்வாஹா."


                  பகிர்வில் ர.சடகோபால்.BA 

புதன், 25 மார்ச், 2015

ஸ்ரீ அரவிந்த யட்சணி மஹா மந்திரம்


                             

கீழ் கண்ட மந்திரத்தை 1008 உரு வீதம் 22 நாட்கள் ஜெபம் செய்ய தேவி தரிசனம் உண்டாகும் 

மூல மந்திரம் 
                             "ஓம் நமோ பகவதி ஸ்ரீம் க்லீம் ஸௌம் ஐம் ஓம் ஹ்ரீம் அரவிந்த யஷணி த்ரைலோக்ய மோகினி மம வசம் குரு குரு சுவாக "

நிவேதனம் 
                        பழம், தேங்காய் ,சுண்டல்,வடை,தேன், வெற்றிலை பாக்கு, மல்லிகை மலர் 

பலன்: 
            திரி காலமும் சொல்லும், அஞ்சனம் ரசாயனம்  மூலிகை  பொருள்களை கொண்டு வந்து கொடுக்கும், துஷ்ட கிரக தோஷங்களுக்கு விபூதி கொடுத்தால் அவை நீங்கி சுகம் உண்டாகும். 

                     பகிர்வில் ர. சடகோபால்.BA 

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

மோகினி தேவதை வசிய மஹா மந்திரம்

மோகினி என்பவர்கள் இந்திரன் சபையில் உள்ள நல்ல தேவதைகள். மோகினியை சித்தி செய்தவர்களுக்கு வசியம்,மோகனம் முதலியவை சித்தியாகும். பிறரை எளிதில் கவரக் கூடியவராக விளங்குவார்கள்.

கீழ் கண்ட மந்திரத்தை 1008 உரு வீதம் 15 நாட்கள் ஜெபம் செய்ய சித்தியாகும்.



மூலமந்திரம்:
                          "ஹரி ஓம் ஸ்ரீம் றியும் சர்வலோக மோகினி வா வா  ஐயும் க்லீம் சிவ சிவ மோகினி நசி நசி மசி மசி சுவாகா"
பூஜை முறைகள் :
                              பௌர்ணமியில் ஆரம்பித்து அமாவாசையில் முடிக்க வேண்டும்.  பால்,பழம் கற்கண்டு, வெற்றிலைப்பாக்கு, தேங்காய், முதலியன வைத்து பூஜை செய்ய வேண்டும். மல்லிகை மலரால் பூஜித்து, வாசனை திரவியம் வைத்து மோகினியை தியானம் செய்ய வேண்டும். 15 ம் நாள் இரவு மோகினி தேவதை ஓர் அழகிய பெண் உருவத்தில் வந்து நிற்கும். உடனே பணிந்து தாயே என்று வணங்கி நான் அழைக்கும் பொழுது வந்து எனக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் என கேட்க வேண்டும் 
          பிறகு மோகினி தேவதை சிரித்து விட்டு மறைந்து விடும். அப்படி சிரித்து விட்டு மறைந்தால் உனது வேண்டுதலை ஏற்று கொண்டதாக அர்த்தம்.

குறிப்பு:
               மோகினிக்குரிய யந்திரம், மை,மூலிகை, கண்டிப்பாக வைக்க வேண்டும் 

                    பகிர்வில் ர.சடகோபால்.BA         

சர்வ வசியம்

ஆமையா றீம் ஐயுங் கிலியுமென்றெ 
 அடைவாக ஸ்ரீயுடனே சவ்வுங் கூட்டித் 
தாமையா இறீம் க்லீம் ஓமென்று சொல்லித் 
 தான்செபிக்க லஷத்திற் சித்தியாகும் 
வாமையா வறுமையெலா மகன்றுபோகும் 
 வளமான தேவதையு மன்னர் தாமும் 
நாமையா லோகமெல்லாம் வசியமாகும் 
 நலமாக தொழிலகளெல்லாஞ் சித்தி தானே
                                                                             -புலிப்பாணி சித்தர் 
பொருள்:
                  "றீம் ஐயுங் கிலியும் ஸ்ரீம் சவ்வும் இறீம் க்லீம் ஓம் "  என்று லட்சம் உரு செபிக்க அம்மந்திரம் சித்தியாய் தரித்தரமெல்லாம் ஒழிந்துபோகும் , இதனால் யாவரும் வசியமாவார்கள். சர்வகாரியங்களும் சித்தியாகும். 

                 பகிர்வில் ர.சடகோபால்.BA   

திங்கள், 19 ஜனவரி, 2015

மதமத்தை வேர் வசியம்

மதமத்தை (பொன்னூமத்தை வேர்)


வசிகரமாம் மதமத்தை மூலம் வாங்க 
     மந்திரத்தை கேள் சொல்வோம் மைந்தாநீதான் 
வசிகரஞ்சேர் கீறிணி வருணியாரே
     மதர்னாமீ சீவி வசியம் பவ்வே 
வசிகரங்க்கான் சாக்காயுப் பருவம் நோக்க 
     வந்து நிற்கும் பருவமதில் சமூலம் வாங்கி 
வசீகரமாய் நிழலுலர்த்தி தைலம் வாங்கி 
     மைந்தனே குப்பிலே அடைத்திட்டாயே
அடைத்ததற்கு வகைகேளு பணந்தான் வாங்கி 
      அதிற்பாதி கற்பூரம் போட்டு தேய்த்து 
படையடைத்து புருவமத்தி திலந்தீட்டு 
      போதுவாறே நினைத்த பெண்கள் வந்து சேரும் 
                                                                                                      -கருவூரார் 

பொருள்:
            மதமத்தை மூலிகையை எடுப்பதற்கு "கீறிணி வருணீ மதர் நாமீ சீவீ 
வசியம் பவ்வே "

 என்று மந்திரம் ஜெபித்து மதமத்தை காயாக இருக்கும் பருவத்தில் மூலமாக எடுத்து நிழலில் உலர்த்தி குழித்தைலம் எடுத்து குப்பியில் அடைத்துகொள் . மேற்படி மதமத்தை தைலத்தை பணவெடை எடுத்து அரை பணவெடை பச்சை கற்பூரம் சேர்த்து கலந்து புருவ மத்தியில் போட்டிட்டு கொண்டு எந்த பெண்ணை நினைத்தாலும் அவள் வசியமாகி உன்னிடத்தில் வந்து சேர்வாள் .

                             பகிர்வில் ர.சடகோபால்.BA 

குப்பைமேனி வேர் ஆக்ருஷ்ணம்

தோற்றுமடா மேனியொன்று தனித்து நின்றால் 

    சுத்தி செய்து பால் பொங்கல் இட்டுப்பின்னும் 
மாற்றமுடன் கலைக்கொம்பால் கெல்லிக்கொண்டு 
    மந்திரந்தான் துட்டமிருக ஆகர்ஷணி 
ஏற்றமுயர் விசுவாமித்திர சுவாகாவென்று 
    சொல்லியே வாங்கிதன் வாயிற்போட 
ஆற்றமுடன் மிருகங்கள் தன்னை நோக்கி 
    அழைத்துடனே மிருக ஆக்ருஷ்ணமுமமே.
                                                                                            -கருவூரார் 

பொருள்:
                     குப்பைமேனி செடி தனியாக முளைத்திருந்தால் அந்த இடத்தில் சுத்தம் செய்து பால்,பொங்கல் வைத்து மான் கொம்பால் கொத்தி 
"துட்ட மிருக ஆகர்ஷணி ஏற்றமுயர் விசுவாமித்திர சுவாகா "     என்று மந்திரம் சொல்லி வேரை பிடுங்கி  வாயில் அதக்கிக்கொண்டு மிருகங்களை அழைக்க அவை வரும் .

                                      பகிர்வில் .ர.சடகோபால்.BA       

பச்சோந்திவித்தை

ஒரு பவுன் தங்கம் வாங்கி அதை இரண்டு காசாக அடித்து, ஒன்று லக்ஷ்மி ஒன்று விஷ்ணு  உருவம் பதித்து எடுத்து கொண்டு,இரண்டு பச்சோந்தி, ஆணும் ,பெண்ணும் புணரும் சமயம் பிடித்து வந்து , ஆணின் வாயில் பெண் காசும் ,பெண்ணின் வாயில் ஆண் காசும் செலுத்தி, ஆற்றில் அக்கறையில் ஒன்று இக்கறையில் ஒன்று புதைத்து, நடு ஆற்றில் நின்று கொண்டு பைரவ மந்திரத்தை தினம் 1008 உரு வீதம் ஏழு நாட்கள் ஜெபம் செய்தால், ஆண் பச்சோந்தி பெண் பச்சோந்தியுடன் வந்து சேரும். உடனே எடுத்து அந்த பச்சோந்திகளை ஆற்றில் வீசி விட்டு அந்த காசுகளை பத்திரப்படுதிக் கொள்ளவும்.  

           இதில் பெண் உருவம் உள்ள காசை ஒரு பெட்டியில் வைத்து விட்டு ,
ஆண் காசை விற்பனை செய்து விடலாம், அது பெண் காசு உள்ள பெட்டிக்கு வந்து விடும். இதை தினம் விற்றாலும் நம்மிடம் வந்து சேரும், பெண் காசு எங்கு உள்ளதோ அங்கு ஆண்  காசு வந்து விடும். இதை ஏழைகளிடம் விற்பனை செய்வது பாவமாகும். உலோபி, கருமி,சண்டாளன் , இவர்களிடம் விற்பனை செய்து ஏழைகளுக்கு உதவலாம்.

பைரவ மந்திரம்:
                                ஓம் ஹ்ரீம் வாம் வடுகாயா ஆபத்தாறணாய வடுகாய ஹ்ரீம் ஓம்...."

 இந்த மந்திரத்தை ஜெபம் செய்ய வேண்டும்.


                                 பகிர்வில் ர.சடகோபால்.BA     

எட்சிணி வசிய மந்திரம்

நல்ல வாரமும், நல்ல நட்சத்திரமும், நல்ல வேளையும் கூடிய சுப தினத்தில் சக்தி பூஜை செய்து கீழ் கண்ட மூலமந்திரத்தை 1008 உருவாக , 48 நாட்கள் ஜெபித்து கடைசி நாளில் யட்சணிக்கு பூஜை முடித்துக்கொள்ளவேண்டும் .
இது மஹா ஆச்சர்ய பலன் அளிக்கும்.

           

மூலமந்திரம்:
                            "ஸ்ரீம் இரீம் அவ்வும் மவ்வும் நமசிவாய சுவாகா"

பலன்:
               பால்,பழம் ,தேங்காய் முதலிய வஸ்துவும்; ஆபரணம், நாணயம் முதலியதும்; உடை  முதலியனவும் அளிக்கும்.

                              பகிர்வில் ர.சடகோபால் .BA 

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து


இந்து திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?
இந்திய தேசத் திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டு. வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர் மூச்சுடன் உறுதியான மனம் கொண்டவன் என்ற பொருளும், அருந்ததி என்ற பெயருக்கு கணவனின் எண்ணம் அறிந்து கற்பு நெறியுடன் வாழ்பவள் என்ற பொருளும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வஸ்து என்றால் பஞ்சபூதங்கள் என்றும், வசிஷ்தா என்றால் பஞ்ச பூதங்களில் ஐக்கியமானவன் என்றும் பொருள் உண்டு. திருமண பந்தத்தில் இணையும் நாள்வரை, மணப் பெண்ணானவள் தன்னையும் தன் உடலையு ம் காமக்கண்ணுடன் பிறர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர்ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொள்வதுடன், தன்னைத் திருமணம் செய்து கொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்கரத்தை கணவனுக்கு முழுமையாகக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள்; கணவனிடம் சரணாகதி அடைகிறாள். பெண்ணின் கழுத்தில் மங்கல நாண்சூடிய கணவன் மணப் பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுடனும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மி மீது வைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியைச் சூட்டு கின்றேன் என்று கூறுகின்றான். மணப்பெண்ணானவள், தன் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜென்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின்றாள். அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்தப்படுத்திக்கொண்டு ஆணையும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்துக்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரியாகத் திகழ்கின்றாள்.


        பகிர்வில் ர.சடகோபால் .BA 

பஞ்சாட்சரம்

பஞ்சாட்சரம் மூன்று விதம்


                                      
           

மூன்று  வித பஞ்சாட்சரம்

                                    ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய

                                    சூட்சும பஞ்சாட்சரம் - சிவயநம

                                    காரணபஞ்சாட்சரம் - சிவ சிவ 

                       ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய

நமசிவய” என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து “ஓம் நமசிவய” என்று உச்சரிப்பதே மரபாகும். சித்தர்கள் இம் மந்திரத்தை பஞ்சபூதங்களின் ஒருமித்த வெளிப்பாடகவே உணர்ந்தனர். இம் மந்திரத்தில் சித்தி அடைவதால் பஞ்சபூதங்கள் கட்டுப்படுவதொடு ஐம்பொறிகளும் நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும். பஞ்சபூதங்களில் இம் மந்திரத்தின் ஆளும் தன்மை

                                 ந – நிலத்தைக் குறிக்கிறது,
                                 ம – நீரைக் குறிக்கிறது,
                                 சி – நெருப்பைக் குறிக்கிறது,
                                 வ – காற்றைக் குறிக்கிறது,
                                 ய – ஆகாயத்தைக் குறிக்கிறது


ந - கிழக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, மஞ்சள் நிறம், கௌதம மகரிஷி

ம – தெற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, கருப்பு நிறம், அத்திரி மகரிஷி

சி – மேற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, புகையின் நிறம், விஸ்வாமித்ர மகரிஷி

வ – வடக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, பொன்னிறம், ஆங்கீரஸ மகரிஷி

 ய –மேல் நோக்கிய திருமுகத்திற்கு உரியது, சிவந்த நிறம், பரத்வாஜ மகரிஷி 


                               சூட்சும பஞ்சாட்சரம்

சிவய நம” என்பது சூட்சும பஞ்சாட்சரம் ஆகும். இம் மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து “ஓம் சிவய நம” என்றே உச்சரிக்க வேண்டும். சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம் எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து ‘அ’ காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து ‘உ’ காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து ‘ம’ காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது.

அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே”

“சிவய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லையே”

திருவாய் பொலியச் சிவய நம என்று நீறணிந்தேன்தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே”

“சித்தம் ஒருங்கிச் சிவய நம என்று இருக்கினல்லால்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே...”

                           காரண பஞ்சாட்சரம்

 சிவ சிவ என்பது காரணப் பஞ்சாட்சரம் என வழங்கப்படும்.சிவ சிவ எனும் மந்திரம் நமது காரண சாரத்தில் உள்ள பிறப் பதிவுகளை நீக்க வல்லது என்பது ஞானியாரின் அழ்ந்த கருத்து. இந்த மந்திரத்தில் சாதாரண உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட, ஞான நிலைக்கு ஒருவரை இட்டு செல்லக்கூடியது. ஆகையால் இந்த மந்திரத்தின் மூலமாக லவ்கீக லாபங்களை எதிர் பார்க்க முடியாது. அதாவது உலகியல் குறிகோள்களை பூர்த்தி செய்த ஒருவருக்கு (துறவு நெறி பூண்டவர்களும், மிக வயதானவர்களும்) இந்த மந்திரம் பொருத்தமானது.

             “சிவ சிவ என்றிடத் தீவினை மாலும்
              சிவ சிவ என்கிலார் தீவினையாளர்
              சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
             சிவ சிவ என்னச் சிவ கதி தானே”


                                              பகிர்வில் ர.சடகோபால் .BA 

சிவவாக்கியம்

சிவவாக்கியர் - சிவவாக்கியம் ​- கடவுள் 

  

                                               


கடவுள் இருக்கின்றானா

சித்தம் என்றால் உயிர் சித்தர்கள் என்றால் உயிரை உணர்ந்தவர்கள் என்று பொருள்.

சித்தர்கள் தனது தவத்தின் மூலம் கடவுள் நிலை உணர்ந்தார்கள். கடவுள் நிலை உணர்ந்த சித்தர்கள் கடவுளைப் பற்றி சாதாரண மனிதர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனே  பல்வேறு பாடல்களை இயற்றியுள்ளனர்.

அந்த பாடல்கள் ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டு ஆன்மா வளர்ச்சி அடைந்த மனிதர்களின் பல்வேறு நிலைகளுக்கு ஏற்ப புரியும் விதத்தில் அமைந்திருப்பது தான் அந்த பாடல்களின் சிறப்பாகும்.

மேலும் சித்தர்கள் தங்கள் பாடல்களில் கடவுளைப் பற்றியும், கடவுளை அடையும் வழிகளைப் பற்றியும் , மருத்துவம் , சோதிடம் என்று பல்வேறு வாழ்வியல் நெறிமுறைகளைப் பற்றியும், இந்தச் சமுதாயம் பயன் பெறும் வகையில் குறியீடுகளாக அமைத்திருக்கின்றனர். 

ஆத்தகைய சிறப்பு வாய்ந்த பாடல்களை பல்வேறு சித்தர்கள் பல்வேறு நிலைகளில் இந்த உலகம் பயன்பெறும் வகையில் பாடியுள்ளனர்.

அதில் சிவவாக்கியர் பாடல்கள் சிலவற்றை இங்கே நினைவு கூர்வோம்.


கடவுள் உள்ளே இருக்கிறான் :

கடவுளைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்களைப் பற்றி சிவவாக்கியர் கீழ்க்கண்ட பாடலைக் குறிப்பிடுகிறார்.


               ””””ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
                      நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
                      வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்காள்
                      கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே”” 
                                                                         -----------சிவவாக்கியர்-----

நமது உடலில் சோதி வடிவமாக உள்ள இறைவனை நமது உடலில் எந்த இடத்தில் இருக்கிறான் என்று தெரியாமல் அவனை அடையக் கூடிய வழி புரியாமல் பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளை செய்து நமது பிராணனை ஓட விட்டு சோதி வடிவமாக உள்ள இறைவனை அடைய முடியாமல் நாட்களை கழித்து மனம் வாடி இறந்து போன மனிதர்கள் எண்ணிக்கையில் அடக்க முடியாத கோடி என்கிறார் சிவவாக்கியார் .

நமது உடலில் கடவுள் இருக்கிறான் என்று தெரிந்தும் அதை அடைய முடியாமல் இறந்தவர்களே கோடி கணக்கில் என்றால் கடவுளை வெளியே தேடி அலைந்து கொண்டிருப்பவர்களை எண்ணிக்கையில் கூற முடியாது என்று சிவவாக்கியர் மனம் வருந்தி பாடுகிறார் .



கடவுள் வெளியே இருக்கிறான்:

கடவுள் உள்ளே இருக்கிறான் என்று தெரிந்தும் அதை அடைய முடியாமல் இறந்தவர்களைப் பற்றி பாடிய சிவவாக்கியர் கடவுளை வெளியே தேடி அலையும் மனிதர்களைப் பற்றி மிகவும் கோபாவேசமாகப் பாடுகிறார்.



                    ””””நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பஞ் சாற்றியே
                          சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்திர மேதடா
                          நட்டகல்லும் பேசுமோ நாதனுள்ளி ருக்கையில்
                          சுட்டசட்டி சட்டுவங் கறிச்சுவைய றியுமோ”” 
                                                              ---------சிவவாக்கியர்--------



ஒரு கல்லை நட்டு அதை தெய்வம் என்று சொல்லிக் கொண்டு பூக்களை அதற்கு சூட்டி அந்த கல்லை சுற்றி சுற்றி வந்து தான் நினைத்த காரியம் நிறைவேறுவதற்காக அந்த கல்லை எந்த தெய்வம் என்று நினைக்கிறார்களோ ,

அந்த தெய்வத்திற்குரிய மந்திரங்களை உச்சாடணம் செய்து தனது காரியத்தை நிறைவேற்றச் சொன்னால் நட்ட அந்த கல்லுக்குள் இருக்கும் கடவுள் உன் கோரிக்கையை நிறைவேற்றுகிறேன் என்று சொல்லுமா என்கிறார.



மேலும் சாப்பிடுவதற்காக சட்டியில் காய்கறிகளைப் போட்டு செய்யும் குழம்பு ,ரசம் ,பொறியல் போன்றவற்றின் சுவையை சமைப்பதற்கு பயன்படுத்தப் படும் சட்டி எப்படி அறியாதோ 

அதைப் போலவே தெய்வம் என்று நம்பி நட்ட கல்லும் நம்முடைய உணர்வுகளை உணர்ந்து கொள்ள முடியாது என்கிறார்.


கடவுள் நம் உள்ளே இருக்கிறான் என்று உணராமல் கடவுளை வெளியே தேடிக் கொண்டு அலையும் மனிதர்களின் முட்டாள்தனமான முறைகளின் மூலம் கடவுளை வணங்குகிறவர்களின் செய்கைகளைத் தான் சிவவாக்கியர் கண்டிக்கிறாரே தவிர ,

கடவுள் இல்லையென்று நாத்திகவாதி போல் நாத்திகம் பேசவில்லை.

இனிமேலாவது சிவவாக்கியரை நாத்திகர் என்று பேசுவதை தயவு செய்து தவிர்ப்போம்.



மறுபிறப்பு


”””கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணெய் மோர்புகா
                  உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
                  விரிந்தபூ வுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா
                  இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை இல்லையே”” 
                                                                        ----------சிவவாக்கியர்-----


கறந்தபால் முலைப்புகா:
பசுவின் மடியிலிருந்து கறக்கப்பட்ட பாலை மீண்டும் அதன் மடியில் கொண்டு சேர்க்க முடியாது , அதாவது முலையிலிருந்து கறக்கப்பட்ட பால் என்று சொல்லும்போது உலகில் வாழும் பெண் உயிரிகளின் முலையிலிருந்து கறக்கப்பட்ட பாலை மீண்டும் அதன் முலை வழியாக அதன் உடலுக்கு உள்ளே செலுத்த முடியாது என்று பொருள்.




கடைந்தவெண்ணெய் மோர்புகா:
மோரை நன்றாக கடைந்தால் அதிலிருந்து வெண்ணெய் தனியாக பிரியும் .

தனியாக பிரித்து எடுக்கப்பட்ட வெண்ணெயை மீண்டும் மோரினுள் செலுத்தி அதை பழையபடி மோராக மாற்ற முடியாது.



உடைந்துபோன சங்கினோசை (உயிர்களும்) உடற்புகா:
உடைந்து போன சங்கின் ஓசை என்றால் சங்கிலிருந்து தனியாக பிரிந்த ஓசை என்று பொருள்.

சங்கை ஊதும் போது அதில் இருந்து ஓசை எழுப்பப் படுகிறது. எழுப்பப்பட்ட ஓசையானது காற்றில் கலந்து விடுகிறது.
அவ்வாறு காற்றில் கலந்த ஓசையை தனியாக பிரித்து மீண்டும் அந்த சங்கினுள் கொண்டு சென்று அடைக்க முடியாது.




விரிந்தபூ யுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா:
மரத்திலிருந்து தனியாக பிரிந்து கீழே விழுந்த பூவும் மரத்திலிருந்து தனியாக பிரிந்து கீழே விழுந்த காயும் மீண்டும் போய் மரத்தில் இணையாது இணையவும் முடியாது.

பூவிரிந்தால் அதாவது மலர்ந்தால் மீண்டும் அது மொட்டாக முடியாது என்று சிலர் அதற்கு அர்த்தம் சொல்கிறார்கள் .

இந்த பாடலில் உள்ள கருத்துக்களை ஊன்றி கவனித்தால் ஒன்று மற்றொன்றாக ஆவதைப் பற்றி சொல்லவில்லை . ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிவதைத்தான் சொல்கிறார்கள்.

எனவே மரத்திலிருந்து பூ உதிர்ந்து கீழே விழுவதையும் , மரத்திலிருந்து காய் உதிர்ந்து கீழே விழுவதையும் , உற்று நோக்கினால் ஒன்றிலிருந்து ஒன்று பிரிவதைத் தௌ்ளத் தெளிவாக உணரலாம்.




இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை யில்லையே:
பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப இந்த ஜென்மம் ஏற்படுகிறது. இந்த ஜென்மத்தில் கர்ம வினைகள் அனைத்தையும் கழித்து விட்டால் முக்தி ஏற்படும் இல்லையென்றால் செய்த கர்மவினைகளுக்கு ஏற்ப மறு ஜென்மம் ஏற்படுகிறது.

இங்கே ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் பிறவி என்பது வேறு. ஜென்மம் என்பது வேறு. பிறவியைப் பற்றி பிறகு தெரிந்து கொள்ளலாம். இபபொழுது ஜென்மத்திற்குள் செல்லலாம்.

ஒரு ஆன்மாவுக்கு 7 ஜென்மம் 7 ஜென்மத்திற்குள் அந்த ஆன்மாவானது தனது கர்ம வினையை கழிக்கா விட்டால் 7x7= 49 ஜென்மம். 49 ஜென்மத்திற்குள்ளும் தனது கர்ம வினையை கழிக்காவிட்டாலும் அந்த ஆன்மாவானது  தானாகவே தனது பயணத்தை முடிக்க சுத்த வெளியில் கலந்து விடும்.

அதனால் தான் நாம் அடிக்கடி ஏழேழு ஜென்மம் என்று சொல்வதற்கு காரணம்.

இந்த ஜென்மத்தில் நாம் நம் கர்ம வினைகள் அனைத்தையும் கழித்து விட்டால் முக்தி கிடைக்கும். முக்தி கிடைத்து விட்டால் நமக்கு மறு பிறப்பு கிடையாது. 

யாருக்கு பிறப்பு கிடையாதோ அவருக்கு இறப்பு கிடையாது. பிறப்பு இறப்பு அற்ற நிலை எப்படி கடவுளுக்கு உண்டோ அப்படியே நமக்கும்.


””””தத்வமவே த்வமேவதத்””  அதாவது நீயே அது அதுவே நீ என்ற நிலை உருவாகி விட்டால் பிறப்பு இறப்பு கிடையாது. பிறவிச் சுழல் கிடையாது மறுஜென்மம்  என்பது கிடையாது.

உடலிலிருந்து உயிர் பிரிந்து விட்டால் உயிரின் கர்ம வினை கழிந்து விட்டால் மறு பிறப்பு கிடையாது. உயிரின் கர்ம வினை கழியா விட்டால் மறு பிறப்பு உண்டு.

இங்கே இந்த பாடலில் உயிர்களும் உடற்புகா என்றால் தனது கர்ம வினையை கழித்து விட்டு முக்தி அடைந்த ஆன்மாவானது பிறப்பு எடுக்க மீண்டும் ஒரு உடலைத் தேடிச் சென்று இணையாது என்று பொருள்.

இறந்தவர் என்றால் கர்ம வினையை கழித்து விட்ட ஆன்மா.
இறந்தவர் பிறப்பதில்லை என்றால் கர்ம வினையை கழித்து விட்டு முக்தி அடைந்த ஆன்மா பிறப்பதில்லை என்று பொருள்.

இந்த பாடலின் மூலம் சிவவாக்கியார் என்ன சொல்ல வருகிறார் என்றால்

பரிணாம வளர்ச்சியில் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து விட்டால் மீண்டும் அது பழைய நிலைக்கு திரும்பாது , இணையாது குரங்கிலிருந்து மனிதன் பிரிந்து வந்து விட்ட பிறகு குரங்கு குரங்காக இருக்கிறது . மனிதன் மனிதன் மனிதனாக இருக்கிறான் . இரண்டு வேறு பட்ட நிலை உருவாகி விட்டது.


அதைப் போல

உடலிலிருந்து பால் பிரிந்து விட்டால் பால் வேறு உடல் வேறு.

மோரிலிருந்து வெண்ணெய் பிரிந்து விட்டால் மோர் வேறு வெண்ணெய் வேறு.

சங்கிலிருந்து ஓசை பிரிந்து விட்டால் சங்கு வேறு ஓசை வேறு.

மரத்திலிருந்து பூ பிரிந்து விட்டால் மரம் வேறு பூ வேறு.

மரத்திலிருந்து காய் பிரிந்து விட்டால் மரம் வேறு காய் வேறு.

அதைப்போல பல்வேறு ஜென்மங்களாக உடலோடு ஒட்டி வந்த உயிரானது கர்ம வினைகளை தீர்த்து முக்தி அடைந்து விட்டால் உயிரானது வேறு உடலைச் சென்று சேராது மறுபிறப்பு எடுக்காது.

உடல் வேறு உயிர் வேறு என்று ஆகிவிடும்”” என்று சொல்கிறார்.


இறந்தவர் பிறப்பதில்லை என்பதன் மூலம் சிவவாக்கியர் மறு பிறப்பு இல்லை என்று சொல்ல வரவில்லை.

எந்த உயிருக்கு மறு பிறப்பு உண்டு எந்த உயிருக்கு மறுபிறப்பு இல்லை என்று தான் சொல்ல வருகிறார்.

                                            பகிர்வில் ர.சடகோபால் .BA 

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...