திங்கள், 13 ஏப்ரல், 2015

ஸ்ரீ வன துர்கா தேவி மஹா மந்திரம்

தியானம் 
               நீல மேனியும் முக்கண்ணுடைய முக மண்டலமும் நவரத்ன கிரீடத்தில் பிறை சந்திரனை தரித்து சிம்ம வாகனத்தில் அமர்ந்து எட்டு கரங்களில் சங்கு,சக்கரம்,திரிசூலம், டமருகம்,முசலம்,கேடயம்,அபயவரதம் தரித்து பாரிஜாத வனத்தில் பலகோடி யோகினி கணங்களுடன் கூடிய வனதுர்கா தேவியை வணங்குகிறேன்.
         
மூல மந்திரம்:                      
               "ஓம் ஹ்ரீம் தும் ஜ்வல ஜ்வல தூம்ர லோஷினி சண்ட ஸம் ஹாரி 
ஐம் ஹ்ரீம் க்லீம் நமோ பகவதி வன துர்க்காயை ஹீம் பட் ஸ்வாஹா"

பூஜை முறைகள் 
                                  வெள்ளிகிழமை அன்று வனத்தில் அமர்ந்து கொண்டு ஜெபம் செய்ய ஆரம்பிக்க வேண்டும். பால்,தேன்,பொங்கல்,வடை,சுண்டல், வைத்து நிவேதனம் செய்து பூஜை செய்ய வேண்டும். செவ்வரளி புஷ்பம் பூஜைக்கு சிறந்தது. 1008 உரு வீதம் 9 நாட்கள் செபம் செய்ய வேண்டும்.

இதன் பயன் 
                          இந்த மந்திரம் சித்தியானால் உலகில் உள்ள பேய்,பிசாசு,பூதம் எல்லாம் பயந்து ஓடும். அஷ்டகர்மமும் சித்தியாகும். முக்காலமும் உணரலாம். சத்ருக்கள் அடங்கி போவார்கள். மேலும் இந்த மந்திரத்தை சித்தி செய்தவர்களை உலகிலுள்ள எந்த தீய சக்தியாலும் ஒன்றும் செய்ய முடியாது.


                            பகிர்வில் ர.சடகோபால்.BA    






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...