செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

மோகினி தேவதை வசிய மஹா மந்திரம்

மோகினி என்பவர்கள் இந்திரன் சபையில் உள்ள நல்ல தேவதைகள். மோகினியை சித்தி செய்தவர்களுக்கு வசியம்,மோகனம் முதலியவை சித்தியாகும். பிறரை எளிதில் கவரக் கூடியவராக விளங்குவார்கள்.

கீழ் கண்ட மந்திரத்தை 1008 உரு வீதம் 15 நாட்கள் ஜெபம் செய்ய சித்தியாகும்.



மூலமந்திரம்:
                          "ஹரி ஓம் ஸ்ரீம் றியும் சர்வலோக மோகினி வா வா  ஐயும் க்லீம் சிவ சிவ மோகினி நசி நசி மசி மசி சுவாகா"
பூஜை முறைகள் :
                              பௌர்ணமியில் ஆரம்பித்து அமாவாசையில் முடிக்க வேண்டும்.  பால்,பழம் கற்கண்டு, வெற்றிலைப்பாக்கு, தேங்காய், முதலியன வைத்து பூஜை செய்ய வேண்டும். மல்லிகை மலரால் பூஜித்து, வாசனை திரவியம் வைத்து மோகினியை தியானம் செய்ய வேண்டும். 15 ம் நாள் இரவு மோகினி தேவதை ஓர் அழகிய பெண் உருவத்தில் வந்து நிற்கும். உடனே பணிந்து தாயே என்று வணங்கி நான் அழைக்கும் பொழுது வந்து எனக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் என கேட்க வேண்டும் 
          பிறகு மோகினி தேவதை சிரித்து விட்டு மறைந்து விடும். அப்படி சிரித்து விட்டு மறைந்தால் உனது வேண்டுதலை ஏற்று கொண்டதாக அர்த்தம்.

குறிப்பு:
               மோகினிக்குரிய யந்திரம், மை,மூலிகை, கண்டிப்பாக வைக்க வேண்டும் 

                    பகிர்வில் ர.சடகோபால்.BA         

சர்வ வசியம்

ஆமையா றீம் ஐயுங் கிலியுமென்றெ 
 அடைவாக ஸ்ரீயுடனே சவ்வுங் கூட்டித் 
தாமையா இறீம் க்லீம் ஓமென்று சொல்லித் 
 தான்செபிக்க லஷத்திற் சித்தியாகும் 
வாமையா வறுமையெலா மகன்றுபோகும் 
 வளமான தேவதையு மன்னர் தாமும் 
நாமையா லோகமெல்லாம் வசியமாகும் 
 நலமாக தொழிலகளெல்லாஞ் சித்தி தானே
                                                                             -புலிப்பாணி சித்தர் 
பொருள்:
                  "றீம் ஐயுங் கிலியும் ஸ்ரீம் சவ்வும் இறீம் க்லீம் ஓம் "  என்று லட்சம் உரு செபிக்க அம்மந்திரம் சித்தியாய் தரித்தரமெல்லாம் ஒழிந்துபோகும் , இதனால் யாவரும் வசியமாவார்கள். சர்வகாரியங்களும் சித்தியாகும். 

                 பகிர்வில் ர.சடகோபால்.BA   

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...