ஞாயிறு, 31 டிசம்பர், 2017

ஆரவல்லி சூரவல்லி

 ஆரவல்லி, சூரவல்லி : ஆண்களை அடிமைப்படுத்தியிருந்த அல்லிராஜ்ஜியம் பற்றி உங்களுக்கு தெரியுமா


ஒரு காலத்தில் இன்றைய கொள்ளேகாலம் தாலுக்காவுக்கும், பவானி தாலுக்காவுக்கும் எல்லையில் உள்ள பாலாற்றங்கரையில் உள்ள நல்லூர் கோட்டை என்ற பகுதியை கொடிகட்டி ஆண்டனர்.இன்றும் அக்கோட்டையின் சிதைந்த பகுதிகளை நல்லூரில் காணலாம். (அந்தியூர் - பர்கூர் - கர்கேகண்டி - நால்ரோடு - ஊகியம் - நல்லூர்)

 ஆரவல்லி, சூரவல்லி சகோதரியினர். இவர்கள் சாகா வரம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர்களுக்கு பல்வரிசை என்றொரு மகள் இருந்தால். மிகவும் அழகானவள், அவளது நளினதிற்கும், கவர்ச்சிக்கும் மயங்காத ஆண்களே கிடையாது என்று கூறுவார்களாம். அப்பேர்ப்பட்ட அழகிக்கு திருமணம் செய்வதென்றால் சாதாரண காரியமா என்ன.


பல்வரிசையை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றால் ஆரவல்லி, சூரவல்லி வைக்கும் போட்டிகளில் வெற்றிப் பெற வேண்டும். இரும்பு குண்டை பொடியாக்க வேண்டும், இரும்பு கம்பியை ஒரே அடியில் மூன்றாக உடைக்க வேண்டும்,சேவல் கோழியோடு சண்டையிட்டு ஜெயிக்க வேண்டும் என்ற கடினமான போட்டிகளை வைத்து அதில் வெற்றி பெறுபவர் தான் பல்வரிசையின் கரம்பிடிக்க முடியும்.

ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் முடிந்தது பற்றி நீங்கள் கேட்டிராத கதை
   இந்த போட்டியில் கலந்துக் கொண்டு பாதியிலேயே பின் வாங்கினாலோ அல்லது தோல்வியுற்றாலோ அடிமைகளாக சிறையில் அடைக்கப்படுவார்கள். இதன் காரணத்தினால் தான் இவர்களது இராஜ்ஜியம் அல்லி ராஜ்ஜியம் என்று கூறப்பட்டது. இவர்களுக்கு முடிவு கட்டவும் ஒரு நேரம் வந்தது, ஒரு வீரன் வந்தான்.....


7 சகோதரிகள் ஆரவல்லி, சூரவல்லி இருவர் மட்டும் அல்ல, மொத்தம் ஏழு பேர் கொண்டவர்கள் இந்த சகோதரிகள். இவர்களில் ஆரவல்லி, சூரவல்லி பெயர்கள் மட்டுமே பல கல்வெட்டுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆரவல்லயும், சூரவல்லியும் சாதாரண  ஆட்கள் இல்லை. சாகாவரம் பெற்றது மட்டுமில்லாது, மாய தந்திரங்கள், சூனியம், மாந்திரீகம் போன்ற செயல்களும் நன்கு அறிந்தவர்கள்.

அழகு பதுமையான பல்வரிசையை திருமணம் செய்யும் ஆசையில் வந்த பல இளவரசர்கள் ஆரவல்லி, சூரவல்லி சகோதரியினரிடம் அடிமைகள் ஆயினர்.

பீமனின் வருகை

 ஆரவல்லி, சூரவல்லி சகோதரிகளின் அட்டகாசத்தை கேள்விப்பட்ட பீமன், இவர்களது அள்ளி ராஜ்ஜியத்திற்கு முடிவுக்கட்ட கிளம்பி வந்தான்.

ஆரவல்லி, சூரவல்லி வைத்த மூன்று போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றிக்கண்ட பீமன். ஒரே அடியில் மூன்றாக உடைக்க வேண்டிய கம்பியை இரண்டாக தான் உடைக்க முடிந்தது. அதனால், பீமனும் தோல்வியுற்றான் என்று கூறி சிறையில் அடைத்தனர் ஆரவல்லி, சூரவல்லி சகோதரியினர்.

பெருச்சாளியாக மகாவிஷ்ணு

 சிறையில் இருந்த பீமனைக் காப்பாற்ற பெருச்சாளியாக உருமாறி மகாவிஷ்ணு சென்றார். அப்போது தர்மர் குறிக்கிட்டு, முடிந்தால் போட்டியில் மோதி ஜெயித்து வாருங்கள் என்று கூறி தடுத்துவிட்டார். மகாவிஷ்ணுவும் பீமனை சிறையிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டார்.

வான சாஸ்திரம்

மகாவிஷ்ணுவான கண்ணபிரான் சகாதேவனை கூப்பிட்டு சாஸ்திரத்தை எடுத்து பார்க்க சொன்னார் , அந்த பெண்ணின் கணவன் அல்லி முத்து என்று இருந்தது . அவன் துரியோதனின் தங்கையின் பிள்ளை அவர் தருமரிடம் பாசமாக இருப்பவர் தகவல் கூறி அழைத்துவரச் சொன்னார்கள் பின்பு அவனை அழைத்து கொண்டு துறவியிடம் சென்று ஆசி பெற்று முட்டை வாங்கி கொண்டு போட்டிக்கு அனுப்பினார்கள் . அல்லி முத்துக்கு இரும்பு கம்பத்தை வெட்ட மகாவிஷ்ணு சொல்லி கொடுத்தார் .கம்பத்தை வெட்டும் போது முதலில் கம்பத்தை U போல் வளைத்து பின்பு வெட்ட சொன்னார் .அல்லிமுத்து எல்லா போட்டிகளிலும் ஜெயித்துவிட்டான்.

பேசியபடியே பெண்ணை மணம் முடித்து எங்கள் ராஜியத்திலேயே இரு என்றனர் .அல்லிமுத்து உங்கள் ராஜ்யமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் பெண்ணை மட்டும் கொடுங்கள் என்றான். நம்மை மதிக்கவில்லையே என்று பெண்ணிடம் விஷம் கலந்த பலகாரத்தை கொடுத்து உன் கணவனுக்கு மட்டும் ஊருக்கு செல்லும் வழியில் கொடு என்றனர் பெண்ணுக்கு பலகாரத்தில் விஷம் உள்ளது தெரியாது வழியில் தின்ன கொடுத்தாள் தின்னவுடன் அவன் உடம்பு நீலம் பாய்ந்தது. அதைபார்த்து பல்வரிசை கதறி அழுதாள்.துறவியிடம் வரம் பெற்றதால் அல்லிமுத்து இறக்கவில்லை . ஆனால் அவன் நான் இறந்ததற்கு சமம் என்றான்
 அப்போது பாடிய பாடல் தான் இப்போது சுடுகாட்டிற்கு செல்லும்போது வெட்டியான் பாடுவது . 

இதை கேள்விப்பட்ட அர்ஜுனன் கோபமடைந்தான் அவர்களை வீழ்த்த சென்றான் . ஆரவல்லியும் சூரவல்லியும் சாகாவரம் பெற்றவர்கள் அர்ச்சுனன் பாணம் விட்டால்தான் இறப்பார்கள் 



வனபத்ரகாளி அம்மன் அருள்புரிதல் வழியில்:





வனபத்ரகாளி அம்மன் அருள் பெற்று, அல்லி ராஜ்ஜியத்தை தோற்கடிக்க முற்பட்டான் அல்லிமுத்து. உடன் அர்ஜுனனும் சென்றதாக கூறப்படுகிறது.


அர்ஜுனன் வருவதை கண்டு பயந்து கேரளத்திற்கு அல்லி சகோதரிகள் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. பின் அல்லிமுத்து, அடிமைகளாக இருந்த அரசர்களை விடிவித்து ஆண்களை காப்பாற்றினான்.

கேரளாவில் மாந்திரீகம் வளர்ந்ததற்கு காரணம் இவர்கள் தான் என்று இந்த சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

குறிப்பு :


வனபத்திரகாளி அம்மன் திருக்கோவில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் இல் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது..
                                     பகிர்வில் ர.சடகோபால் .BA

திங்கள், 23 அக்டோபர், 2017

ஸ்ரீ-வராஹி மஹா மந்திரம்

வராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். மாந்திரிகத்தில் ஓர் அசைக்க முடியாத சக்தியாக விளங்குபவள் வராஹி. வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. தன் பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூல மந்திரத்தை 1008 உரு வீதம் 26 நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹா வராஹி அருள் கிட்டும்.
தொடர்புடைய படம்
மூல மந்திரம்:


"ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா"


பூஜை முறைகள்:

வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும்.


இதன் பலன்:

தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.


                                       பகிர்வில் ர.சடகோபால்.BA

உடல் கட்டு மந்திரம்

"ஓம் உள்ளங்கால் இரண்டும் பூமாதேவி காவல் கணுக்கால் இரண்டும் கணபதி காவல் முழங்கால் இரண்டும் முக்கோணர் காவல் துடை இரண்டும் துர்க்கை காவல் அரை ஆதி சிவன் காவல் வயுறு வைரவன் காவல் மார்பு மார்க்கண்டேயன் காவல் கழுத்து கந்தர்வன் காவல் உதடு உத்தமாதேவி காவல் பல்லு பரசுராமன் காவல் நாவு நாராயணன் காவல் கண்ணுரெண்டுக்கும் காளிங்கராயன் காவல் நெத்திக்கு நீலவர்ணன் காவல் தலைக்கு தம்பிரான் காவல் உடம்பு சுற்றிலும் சங்கு சக்கரம் காவல் என்னை கார்க்காவிட்டால் இது என் கட்டல்ல ஈஸ்வரன் கட்டு என்னை கார்க்க நம சிவாய "

இந்த மந்திரத்தை 21 முறை சொல்லிவிட்டு பிறகு பூஜையில் அமரவும்.


                       பகிர்வில் ர.சடகோபால்.BA

வாலை தேவி மஹா மந்திரம்

வாலை தேவி என்பவள் சித்தர்களால் வணங்கி வழிபட்டு வந்த ஓர் பெண் தெய்வமாகும். அவ்வாறு சித்தர்களால் வழிபட்டு வந்த தேவியை நாமும் வழிபட மாந்திரிகம் என்னும் நூலில் தேவியின் மந்திரத்தையும் வழிபடும் முறையையும் கருவூரார் சித்தர் கூறியிருக்கிறார். கீழ் காணும் மந்திரத்தை ஒரு லட்சம் உரு ஜெபிக்க சித்தியாம்.


மூலமந்திரம்:

"ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா வாலை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி நமஹா"

இந்த மந்திரத்தை சித்தி செய்தவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. மேலும் இந்த தேவியால் சர்வ சுப காரியங்களும் சித்தியாகும். செல்வம் பெருகும். உடலில் உள்ள நோய்களெல்லாம் விலகி விடும்.


                                  பகிர்வில் ர.சடகோபால்.BA

மோகினி தேவதை வசிய மஹா மந்திரம்

மோகினி என்பவர்கள் இந்திரன் சபையில் உள்ள நல்ல தேவதைகள். மோகினியை சித்தி செய்தவர்களுக்கு வசியம்,மோகனம் முதலியவை சித்தியாகும். பிறரை எளிதில் கவரக் கூடியவராக விளங்குவார்கள்.


கீழ் கண்ட மந்திரத்தை 1008 உரு வீதம் 15 நாட்கள் ஜெபம் செய்ய சித்தியாகும்.




மூலமந்திரம்:
"ஹரி ஓம் ஸ்ரீம் றியும் சர்வலோக மோகினி வா வா ஐயும் க்லீம் சிவ சிவ மோகினி நசி நசி மசி மசி சுவாகா"


பூஜை முறைகள் :


பௌர்ணமியில் ஆரம்பித்து அமாவாசையில் முடிக்க வேண்டும். பால்,பழம் கற்கண்டு, வெற்றிலைப்பாக்கு, தேங்காய், முதலியன வைத்து பூஜை செய்ய வேண்டும். மல்லிகை மலரால் பூஜித்து, வாசனை திரவியம் வைத்து மோகினியை தியானம் செய்ய வேண்டும். 15 ம் நாள் இரவு மோகினி தேவதை ஓர் அழகிய பெண் உருவத்தில் வந்து நிற்கும். உடனே பணிந்து தாயே என்று வணங்கி நான் அழைக்கும் பொழுது வந்து எனக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் என கேட்க வேண்டும்
பிறகு மோகினி தேவதை சிரித்து விட்டு மறைந்து விடும். அப்படி சிரித்து விட்டு மறைந்தால் உனது வேண்டுதலை ஏற்று கொண்டதாக அர்த்தம்.


குறிப்பு:
மோகினிக்குரிய யந்திரம், மை,மூலிகை, கண்டிப்பாக வைக்க வேண்டும்

                            பகிர்வில் ர.சடகோபால்.BA

மாயமாய் மறைவது எப்படி

ஒருவரை நாம் கண்டே பிடிக்க முடியாவிடில், அவன் மாயமாய் மறைந்து விட்டான் என உவமையாகச் சொல்வது வழக்கம். மற்றபடி நமது புராணக் கதைகளின் ஊடே ஒரு இடத்தில் இருந்து சட்டென மறைந்து வேறு இடத்தில் தோன்றுதல் போன்ற பல குறிப்புகளை காண முடிகிறது.


நிஜ வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியமா?


சாத்தியமே என்கிறார் அகத்தியர். "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் இது பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கிறது. ஆமாம்.. நினைத்த மாத்திரத்தில் நமது உருவத்தை மறைத்துக் கொள்ள உதவிடும் அஞ்சன மை ஒன்றைப் பற்றி கூறியிருக்கிறார்.


அதை எப்படி தயார் செய்வது?


சித்தியுள்ள அஞ்சனந்தா னொன்றுகேளு
திறமான தேவாங்கு காமரூபி
பத்தியுள்ள கருக்குருவி மூன்றின்பிச்சும்
பாலகனே ஒன்றாக கருக்கிக் கொள்ளு
சுத்தமுள்ள முட்டோட்டி லிட்டுக்கொண்டு
சூதுகப டில்லாமல் வருக்கும்போது
பத்தியுடன் தானுருகி மையாய்நிற்கும்
மார்க்கமுடன் கல்வமதில் வைத்துக்காணே




காணவே பேரண்டத் தயிலம்விட்டு
கடைந்தெடுக்கும் போதிலிருக் கண்ணிற்காணும்
ஊணவே ஓம்கிலிரங்ரங் கென்றேதான்
உத்தமனே தான்செபித்து வழித்துக்கொண்டு
பேணவே மதகரியின் கொம்பில்வைத்து
பிலமான சிமிழதனைப் பதனம்பண்ணி
பண்ணியந்த மையெடுத்துத் திலதம்போட்டு
கண்ணிறைந்த காட்சியிலே நின்றால்மைந்தா




காசினியி லுனதுருவைக் காணமாட்டார்
புண்ணியனே மனதுகந்த யிடத்தில்நின்று
போதமுடன் ஞானநெறி தன்னைப் பாரு
தன்னருளைத் தனதாகப் பார்த்துப்பின்பு
சங்கையுடன் திலதமதை யெடுத்துப்பாரே
என்னசொல்வேன் உனதுரு கண்ணிற்காணும்



தேவாங்கு, காமரூபி, கருக்குருவி ஆகியவற்றின் பிச்சுக்களை ஒன்றாக எடுத்து கருக்கிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனை சுத்தமான முட்டை ஓட்டில் சேகரித்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அப்போது அவை உருகி மை போலாகி இருக்கும் என்கிறார் அகத்தியர். இந்த மையை கல்வத்தில் இட்டு பேரண்டத் தயிலம் சேர்த்து கடைய வேண்டுமாம்.


கடைந்த பின் அதனை வழித்து எடுத்து, யானைத் தந்ததால் ஆன சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்கிறார். இப்படி சேகரம் செய்யும் போது "ஓம் கிலி ரங் ரங்" என்ற மந்திரத்தினை செபித்துக் கொண்டே செய்திட வேண்டுமாம்.


உருவத்தை மறைக்க வேண்டிய சந்தர்ப்பம் வரும் போது, சிமிழில் இருந்து மையை எடுத்து திலகமாக இட்டுக் கொள்ள உலகில் உள்ள யாரும் உருவத்தைக் காணமுடியாது என்கிறார். பின்னர் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று யோகம் தவம் போன்றன செய்து தன்னை அறிந்து கொள்ள கூறுகிறார். இந்த திலகத்தை அழித்து விட்டால் உருவம் பிறர் கண்களுக்குத் தென்படத் தொடங்கிவிடும் என்கிறார்.


இது ஒரு தகவல் பகிர்வே, இதன் சாத்திய அசாத்தியங்கள் விவாதத்திற்கும் மேலதிக ஆய்வுகளுக்கும் உட்பட்டவை.




                                  பகிர்வில் ர.சடகோபால்.BA

சனி, 16 செப்டம்பர், 2017

அஷ்டகர்ம மூலிகைகள்


அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு :


பண்டைய காலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த நம் தமிழக சித்தர்கள் மூலிகைகளை கொண்டே மந்திர உருவேற்றி பல காரியங்களில் வெற்றியடைந்தனர். அதன்படி அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் அஷ்டகர்மங்கள் ( எட்டு சித்திகள் ) செய்ய ஒரு சித்திக்கு 8 மூலிகை என அஷ்ட சித்திக்கு 64 மூலிகைகள் ஆகும். அஷ்டகர்மம் என்பது 1. ஆகர்ஷனம், 2. உச்சாடனம், 3. தம்பனம், 4. பேதனம், 5. மாரணம், 6. மோகனம், 7. வசியம், 8. வித்வேஷனம் ஆகும். இந்த அஷ்ட கர்ம செயல்களை பற்றி விரிவாக காணலாம்.

1. ஆகர்ஷனம் : நமக்கு தேவையானதை இருக்கும் இடத்திலிருந்து நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்கும் வித்தையாகும். இதற்கு உதவும் மூலிகைகள் 1. வேளை, 2. உள்ளொட்டி, 3. புறவொட்டி, 4.சிறு முன்னை, 5. குப்பைமேனி, 6. அழுகண்ணி, 7. சிறியாநங்கை, 8. எருக்கு என எட்டு மூலிகைகளாகும். இதில்
மிருகங்களை அழைப்பதற்கு - வேளை, குப்பைமேனி.
பெண்களை அழப்பதற்கு - உள்ளொட்டி, அழுகண்ணி.
அரசர், பிரபுக்ளை அழைப்பதற்கு - சிறுமுன்னை.
துர்தேவதைகளை அழைப்பதற்கு - புறவொட்டி.
தேவதைகளை அழைப்பதற்கு - எருக்கு.
அனைத்து அழைப்பிற்கும் - சிறியாநங்கை.


2. உச்சாடனம் : பேய், பிசாசு, கெட்ட ஆவிகள், நோய்கள் தீமைகளை விரட்டியடித்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பேய் மிரட்டி, 2. மான் செவிகள்ளி, 3. தேள்கொடுக்கி, 4. கொட்டைகரந்தை, 5. வெள்ளை கண்டங்கத்திரி, 6. மருதோன்றி, 7. பிரமதண்டு, 8. புல்லுருவி ஆகும். இதில்
மிருகங்களை விரட்ட - பேய்மிரட்டி.
எதிரிகளை விரட்ட - மான்செவிகள்ளி.
உடலில் ஏறிய விஷங்களை விரட்ட - தேள்கொடுக்கி.
நீர்வாழ் உயிரனங்களை விரட்ட - கொட்டைகரந்தை.
கால்நடைகளை விரட்ட - வெள்ளை கண்டங்கத்தரி.
பூத பைசாசங்களை விரட்ட - மருதோன்றி, புல்லுருவி
பிறர் நமக்கு செய்யும் தீமகளை விரட்ட - பிரமதண்டு.


3. பேதனம் : ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல், அதாவது ஒரு விஷயத்தை நினைத்து நம்மிடம் வருபவரை அந்த நினைப்பை வேறுபட்டு போகும்படி செய்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. வட்டதுத்தி, 2. செம்பசளை, 3. மாவிலங்கு, 4. பாதிரி, 5. கோழியாவரை, 6. சீந்தில்கொடி, 7. புடலங்கொடி, 8. ஆகாயதாமரை ஆகும்.
நெருப்பின் உக்கிரத்தை பேதிக்க - வட்டதுத்தி,
மனிதனின் எண்ணத்தை பேதிக்க - செம்பசளை,
பூத, பிசாசுகளை பேதிக்க - மாவிலங்கு, பாதிரி,
துர்தேவதைகளை பேதிக்க - கோழியாவரை,
எதிரிகளை பேதிக்க - சீந்தில்கொடி,
பெண்களை பேதிக்க - புடலங்கொடி,
வியாதிகளை பேதிக்க - ஆகாயதாமரை.


4. மாரணம் : கொல்வது அல்லது மாற்றுவது. உலோகங்களை அதன் தன்மையில் இருந்து மாற்றுவது. எதிரிகளுக்கு நோயை உண்டாக்கி கொல்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. நச்சுப்புல், 2. நிர்விஷம், 3.சித்திரமூலம், 4. அம்மன் பச்சரிசி, 5. கார்த்திகை கிழங்கு, 6. மருதோன்றி, 7. கருஞ்சூரி, 8. நாவி ஆகும்.
மனிதர்களை மாரணம் செய்ய - நச்சுப்புல், நிர்விஷம்,
வியாதிகளை மாரணம் செய்ய - சித்திரமூலம், கருஞ்சூரை,
கண்ணாடிகளை மாற்ற - அம்மன் பச்சரிசி,
மிருகங்களை மாரணம் செய்ய - மருதோன்றி, கார்திகை கிழங்கு.



5. மோகனம் : பிறரை நம்மிடம் மயங்கி இருக்க செய்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பொன்னூமத்தை, 2. கஞ்சா வேர், 3. வெண்ணூமத்தை, 4. கோரைக்கிழங்கு, 5. மருளூமத்தை, 6. ஆலமர விழுது, 7. நன்னாரி, 8. கிராம்பு ஆகும்.
பெண்களை மோகிக்க - பொன்னூமத்தை,
பொதுமக்களை மோகிக்க - கஞ்சா வேர்,
உலகத்தை மோகிக்க - வெண்ணூமத்தை,
விலங்குகளை மோகிக்க - கோரைக்கிழங்கு,
தேவதைகளை மோகிக்க - மருளூமத்தை,
அரசர்களை மோகிக்க - ஆலம்விழுது,
மனிதர்களை மோகிக்க - கிராம்பு,
எல்லாவற்றையும் மோகிக்க - நன்னாரி.



6. வசியம் : எல்லாவற்றையும் நம்மிடம் விருப்பமாகவும் இஷ்டமாயும் இருக்க வைத்தல். இதற்கு பயன்படு்ம் மூலிகைகள் 1. சீதேவிச் செங்கழுநீர், 2. நிலவூமத்தை, 3. வெள்ளை விஷ்ணுகிரந்தி, 4. கருஞ்செம்பை, 5. வெள்ளை குன்றி மணி, 6. பொன்ணாங்கன்னி, 7. செந்நாயுருவி, 8. வெள்ளெருக்கு ஆகும்.

இராஜ வசியத்திற்கு - சீதேவி செங்கழுநீர்,
பெண் வசியத்திற்கு - நிலவூமத்தை,
லோக வசியத்திற்கு - வெள்ளெருக்கு,
ஜன வசியத்திற்கு - கருஞ்செம்பை, விஷ்ணுகிராந்தி,
விலங்கு வசியத்திற்கு - வெள்ளை குன்றி மணி,
தேவ வசியத்திற்கு - பொனணாங்கன்னி,
சாபம், வழக்குகள் வசியத்திற்கு - செந்நாயுருவி.



7. வித்துவேஷனம் : பகையை உண்டாக்குதல். இதற்கு பயன்படும் மூலிகைகள். 1. கருங்காக்கனம், 2. வெள்ளை காக்கனம், 3. திருகு கள்ளி, 4. ஆடுதின்னாபாளை, 5. பூனைக்காலி, 6. கீழாநெல்லி, 7. ஏறண்டம், 8. சிற்றாமணக்கு ஆகும்.
அரசர்களுக்குள் பகை உண்டாக்க - கருங்காக்கணம்,
தேவர்களுக்கு - வெள்ளைக்காக்கணம், திருகுகள்ளி,
பூத, பைசாசங்களுக்கு - ஆடுதின்னாபாளை,
பெண்களுக்கு நோய் உண்டாக்க - பூனைக்காலி,
எதிரிகளால் உண்டாகும் ஆபத்தை தடுக்க - கீழாநெல்லி,
உணவை உண்ணாமல் செய்ய - சிற்றாமணக்கு.


8. தம்பனம் : தடுத்து நிறுத்துத்தல், விலங்குகளின் வாயை கட்டுதல். இதற்க்கு பயன்படும் மூலிகைகள் 1. கட்டுக்கொடி, 2. பால்புரண்டி, 3. பரட்டை, 4. நீர்முள்ளி, 5. நத்தைச்சூரி, 6. சத்தி சாரணை, 7. பூமிச்சர்கரை, 8. குதிரைவாலி ஆகும்.
விந்துவை கட்ட - கட்டுக்கொடி, பால்புரண்டி, நீர்முள்ளி,
தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர - கட்டுக்கொடி,
பெண்களின் முலைபாலை கட்ட - பால்புரண்டி,
வயிற்றுப் போக்கை நிறுத்த - பரட்டை,
கற்களை கறைக்க - நத்தைச்சூரி,
செயல்களை செயல்படாமல் கட்ட - சத்திசாரணை,
திரவத்தை கட்டி திடமாக்க - பூமிச்சர்கரை கிழங்கு,
கருப்பையில் உள்ள கருவை கட்ட - குதிரைவாலி.

மேற்படி மூலிகைகளை உரிய நாளில் காப்பு கட்டி, சாபநிவர்த்தி மந்திரம் சொல்லி பிடுங்கி வந்து உரிய மந்திர உருவேற்றி மேற்பட்ட அஷ்டகர்ம செயல்களை செய்ய அனைத்தும் ஜெயமாகும்.




                        பகிர்வில் ர.சடகோபால்.BA 

மழை பற்றிய சகுனங்கள்





மலைக்க வைக்கும் நம் முன்னோர்களின் சாதனை!!!


கீழ்கண்ட சகுனங்கள் தோன்றினால் மழை வரும்.


1. தும்பி பறந்தால் தூரத்தில் மழை


2. தட்டான் தாழப் பறந்தால் மழை


3. அந்தி ஈசல் அடை மழை


4. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை.


5. தவளை கத்தினால் மழை


6. மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை


7. கொக்கு மேடேறினால் மழை


8. பகற்பொழுதில் சேவல் கூவி வானத்தைப்

பார்த்தால் மழை


9. கழுதை காதை உயர்த்தினால் மழை


10. ஈசல் பறந்தால் மழை


11. புற்றிலே ஈசல் பறந்தாலும், மண்ணிலே கரையான் கூடினாலும் மழை


12. பாம்புகள் மரத்தில் ஏறினாலோ அல்லது

திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டாலோ மழை


13. பசு மாடுகள் கன்றைத் தேடி வீட்டிற்கு ஓடினால் மழை.


14. பூனைகள் நிலத்தை பிராண்டினால் மழை


15. குழந்தைகள் அணைக்கட்டி விளையாடினால் மழை


16. மலைகள் நீல நிறமாக காட்சியளித்தால் மழை


17. குகைகள் பனிமூட்டத்தால் மறைக்கப்பட்டிருந்தால் மழை


18. ஓணான்கள் வானத்தைப் பார்த்தால், மரத்தில் ஏறி விளையாடினால் மழை


19. பூனை, எலி, பாம்பு முதலிய பிராணிகள் காரணமின்று அங்குமிங்கும் ஓடினால் மழை.


20. மயில்கள் நடனமாடினால் மழை


21. பசுக்கள் சூரியனையும் ,வானத்தையும் பார்த்தால் மழை


22. பச்சோந்திகள் மரத்தின் மீது அமர்ந்து தன் நிறத்தை மாற்றிக்கொண்டால் மழை


23. பசுக்கள் நிழலிடங்களை விட்டு நகர மறுத்தால் மழை


24. நாய்கள் வீட்டிற்கு வெளியே செல்ல மறுத்தால், வானத்தைப் பார்த்து குரைத்தால் மழை


25. சிட்டுக்குருவிகள் மண்ணில் புரண்டு விளையாடினால் மழை


26. மீன்கள் நீரில் துள்ளி விளையாடினால் மழை.


27. பறவைகள், மிருகங்கள் நுனிப்புல் உண்பதைக் கண்டால் மழை.


28. நீரின் சுவை மாறுதல், உப்பு நீர்த்துப் போதல், மோர் புளித்து போதல் நடந்தால் மழை.


29. இரும்பு பொருட்களிலிருந்து மாமிச வாடை வந்தால் மழை


30. சந்திரனை சுற்றி சிவப்பு நிற வளையம் காணப்பட்டால் அல்லது சந்திரனின் நிறம் கோழியின் கண் போன்று காணப்பட்டால் மழை.


31. வட கிழக்கில் மின்னல் தோன்றினால் மழை


32. மேகங்களால் மறைக்கப்பட்ட சந்திரனிலிருந்து பிரதி சந்திரன் தோன்றினால் மழை


33. இரவு நேரங்களில் இடி முழங்கினால், பகல் நேரத்தில் மின்னல் அடித்தால், கிழக்கு திசையிலிருந்து குளிர்ந்த காற்று வீசினால் மழை.


நம் இயற்கையை கண்டறிந்த இயற்கை ஞானிகளை போற்றுவோம்.....






                             பகிர்வில் ர.சடகோபால்.BA

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

விஷ்ணுவின் அவதாரங்கள்

1.மச்ச அவதாரம்

மச்ச அவதாரம் வைணவ சமயக் கடவுள் திருமாலின் முதல் அவதாரம். மச்சம் என்பது சமசுகிருத மொழியில் மீன் எனப்பொருள் தரும். இந்த அவதாரத்தில் திருமால் நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவருபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது.


இதில் மச்சாவதாரத் தோற்றம், திருமால் நீர்ப்பிரளயத்திலிருந்து உலகைக் காத்தமை, பிரம சிருட்டி, திரிபுர வதம், தாரகாசுரனுடன் போர், பார்வதி சிவபெருமானை மணத்தல், கந்தனாகிய முருகனின் தோற்றம் ஆகியவற்றை உணர்த்துகிறது. (அபிதான சிந்தாமணி - பக் 1236)

2. கூர்ம அவதாரம்

கூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின்படி திருமால் எடுத்த இரண்டாம் அவதாரம் ஆகும். இதில் இவர் ஆமை அவதாரம் எடுத்தார். இது சத்திய யுகத்தில் நடந்ததென்பது தன்னம்பிக்கை (ஐதிகம்).


திருப்பாற்கடலை அசுரரும் தேவரும் மந்திரமேருவை மத்தாக வைத்துக் கடைகையில் அடியில் பிடிமானத்திற்காகத் திருமால் ஆமை உரு எடுத்து மத்திற்குப் பிடிமானமாக இருந்தார். (பாகவதம்- கூர்ம புராணம்)


3. வராக அவதாரம்

வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்.


4.நரசிம்ம அவதாரம்


நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார்.தன் பரமபக்தனான பிரகலாதனை இரட்சித்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம் என்பது ஐதிகம்.

5.வாமன அவதாரம்

வாமன அவதாரம் என்பது மாலியத்தார் (வைணவர்கள்) முழுமுதற் கடவுளாகக் கருதும் திருமால் (விஷ்ணு) நில உலகில் தோன்றிய ஐந்தாம் அவதாரம் ஆகும். அவதாரம் என்றால் இறைவன் மனித அல்லது வேறு ஒரு உருவில் இவ்வுலகில் பிறத்தல். இதன் நோக்கம் தருமத்தை நிலைநாட்டலாகும். இந்த அவதாரத்தில் இவர் கேரளத்தில் பிராமண குலத்தில் பிறந்தார். இவர் குள்ளமான உருவம் கொண்டவராய் இருந்தார். இவர் உபேந்திரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

6.பரசுராமர்அவதாரம்

பரசுராமர் அல்லது பரசுராம பார்கவர் என்பவர் இந்து புராணங்களில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்னி முனிவரின் மகன் ஆவார். பரசு என்றால் கோடாலி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார். கடல் கொந்தளித்த போது இவர் அதனை அடக்கி கொங்கணக் கடற்கரைப் பகுதிகளைக் காத்தார் என்பது தொன்நம்பிக்கை.

7.
பலராமர்  அவதாரம்

பலராமர்இந்து மதத்தில் பலராமர் கிருஷ்ணரின் அண்ணன் ஆவார். இவர் பலதேவர், பலபத்ரர், ஹலாயுதர் என்றும் அழைக்கப்படுகிறார். வைணவத்திலும் தென்னிந்திய இந்து புராணங்களிலும் பலராமர் விஷ்ணுவின் அவதாரமாகவே கருதப்படுகிறார். எனினும் இவர் விஷ்ணு படுத்திருக்கும் ஆதி சேஷனின் வடிவம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவர் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகப் பிறந்ததாகக் கூறப்படுகிறது.


8.இராமர் 
 அவதாரம்

இராமர் இந்துக் கடவுள்களுள் ஒருவராவார். விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.


கம்ப இராமாயணம்

கம்பரால் தமிழில் இயற்றப்பட்ட இராமாயணம் கம்ப இராமாயணம் ஆகும். இது சிறந்ததோர் இலக்கியமாகும்.

இந்து சமய இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் இவரது வாழ்க்கையை விவரிப்பதாக அமைந்துள்ளது. இராமாயணத்தில் சீதை இவரது மனைவி. இவர் இலட்சுமியின் அவதாரமாக கருதப்படுகிறார்.
இராயணம்
தசரதன் என்ற அரசன் அயோத்தியை அரசாண்டு வந்தான். அவனுக்கு கோசலை, கைகேயி, சுமத்திரை என்ற மூன்று மனைவியர் உண்டு. எல்லா செல்வமும் இருந்தும் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. அதனால் தசரதன் பெரிதும் வருந்தினான். யாகங்கள் பல செய்தான். அதன் பயனாக அவன் மனைவியர் மூவரும் கருவுற்றனர்.

இராமர் பிறந்தார்

தசரத‌னி‌ன் முதல் மனைவி கோசலை ஆவாள். அவள் வயிற்றிலிருந்து திருமால் இராமராகப் பிறந்தார். இரண்டாம் மனைவி கைகேயி வயிற்றில் பரதன் பிறந்தான். மூன்றாம் மனைவி சுமத்திரை வயிற்றில் இலக்குவன், சத்துருக்கன் என்ற இருவரும் பிறந்தனர்.
தசரதன் தம் மக்கள் நால்வரையும் குலகுருவாகிய வசிட்டரிடம் கல்வி கற்கச் செய்தான். அவர்கள் நால்வரும் கல்வி கேள்விகளிலும், போர்ப்பயிற்சிகளிலும் சிறந்து விளங்கினர்.
தாடகை வதம்
விசுவாமித்திரர் என்ற முனிவர் காட்டில் வேள்வி செய்தார். தாடகை முதலான அரக்கர்கள் அவர் வேள்விக்கு இடையூறு செய்தனர். விசுவாமித்திரர் தசரதனிடம் வந்தார். தம் வேள்வியைக் காக்கும் பொருட்டு இராமனை அனுப்புமாறு கேட்டார். தசரதர் இராமனுடன் இலக்குவனையும் அனுப்பி வைத்தான். இராமரும், இலக்குவனும் தாடகை முதலாய அரக்கர்களை வதம் செய்து முனிவர் வேள்வியைக் காத்தனர். வேள்வியும் சிறந்த முறையில் முடிந்தது.

சீதை திருமணம்

பிறகு விசுவாமித்திரர் இராமனையும் இலக்குவனையும் அழைத்துக் கொண்டு மிதிலை சென்றார். சனகன் என்ற மன்னன் மிதிலையை ஆண்டுவந்தான். அவனுக்குச் சீதை என்ற ஓர் அழகிய மகள் இருந்தாள். தம்மிடம் உள்ள வில்லை வளைப்பவருக்குச் சீதையைத் திருமணம் செய்து கொடுப்பதாக அவன் அறிவித்திருந்தான்.

மன்னர்கள் பலர் அவ்வில்லை வளைக்க முயன்றனர், முடியவில்லை. இராமர் அவ்வில்லை வளைத்து முறித்தார். சனகன் மகிழ்ந்து தன் மகள் சீதையை இராமருக்கு திருமணம் செய்து கொடுத்தான். திருமணம் முடிந்து வந்த இராமருக்கு முடிசூட்ட எண்ணினான் தசரதன். அதற்கு நாளும் குறித்து விட்டான். எல்லா ஏற்பாடுகளும் தயாராகிவிட்டன.

கூனி சதி

கைகேயியின் தாதி கூனி ஆவாள். அவள் கைகேயியின் மகன் பரதனுக்கு முடிசூட்ட எண்ணினா‌ள். அதனை கைகேயியிடம் தெரிவித்தாள். முதலில் கைகேயி ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு பலவிதமாகச் சொல்லிக் கூனி கைகேயியின் மனத்தை மாற்றிவிட்டாள். கைகேயி, தசரதனிடம் பிடிவாதம் செய்து தம்மகன் பரதன் நாடாளும்படியாகவும், இராமர் பதினான்கு ஆண்டு காடாளும்படியாகவும் உறுதிமொழி வாங்கி விட்டாள். தந்தை சொற்படி இராமர் உடனே காட்டிற்குச் சென்றார். சீதையும், இலக்குவனும் உடன் சென்றனர். அதனை அறியாத தசரதன் உயிர் துறந்தான்.
கேகய நாட்டிற்குச் சென்ற பரதன் அப்பொழுதுதான் திரும்பி வந்தான். வந்தவுடன் நடந்ததை அறிந்தான். மிகவும் வருந்தினான். தன் தாயை வெறுத்தான். தந்தைக்குரிய ஈமக்கடன்களைச் செய்தான். உடனே இராமரை அழைத்து வரக் காட்டிற்குச் சென்றான்.
காட்டிற்குச் சென்ற பரதன், இராமரைக் கண்டு வணங்கினான். திரும்பி வந்து நாடாளும்படி வேண்டினான். தந்தை சொற்படி பதினான்கு ஆண்டு கழித்து வருவதாகவும், அது வரை பரதனை நாட்டை ஆளும்படி இராமர் கூறினார். பரதன் இராமரின் பாதுகைகளைப் பெற்று வந்து, அரசப் பிரதிநிதியாக ஆண்டு வந்தான்.

இராவணன்

இராவணன் என்னும் அரக்கன் இலங்கையை ஆண்டு வந்தான். அவன் தங்கை சூர்ப்பனகை ஆவாள். அவள் காட்டில் வாழும் இராம இலக்குவனரைக் கண்டாள். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தினாள். இலக்குவன் கோபம் கொண்டு சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து எறிந்தான்.
சூர்ப்பனகை அழுதுகொண்டு இராவணனிடம் சென்றாள். நடந்த செய்திகளைச் சொல்லவில்லை. `இராமன் மனைவி சீதையை உனக்காக தூக்கி வர முயன்றேன். அவன் தம்பி இலக்குவன் என் மூக்கை அறுத்துவிட்டான்' என்று கூறி அழுதாள். இராவணன், சூர்ப்பனகையைச் சமாதானப்படுத்தினான். அவர்களைத் தண்டிப்பதாகவும் கூறினான்.
மாயமான்
இராவணன், மாரீசன் என்பவனை மாயமானாக அனுப்பி இராம இலக்குவரைத் தனியாகப் பிரித்தான். பிறகு, சீதை தனித்து இருப்பதை அறிந்து பர்ணசாலையோடு பெயர்த்துச் சீதையை தூக்கிக் கொண்டு சென்றான். வழியில் கழுகு அரசனாகிய சடாயு தடுத்தான். அவனை வெட்டி வீழ்த்தி விட்டு இராவணன் இலங்கையில் உள்ள அசோக வனத்தில் சீதையை மறைத்து வைத்தான்.

திரும்பி வந்த இராம, இலக்குவர் சீதையைக் காணாமல் தேடினர். வருந்தி வந்து கொண்டிருக்கும்பொழுது குற்றுயிராய்க் கிடந்த சடாயு என்ற கழுகு அரசன் உண்மையைக் கூறிவிட்டு உயிர் துறந்தான். தொடர்ந்து தேடி வரும்பொழுது சுக்ரீவனைச் சந்தித்தனர்.
சுக்ரீவனுக்குப் பட்டம்
சுக்ரீவன் குரங்குகளுக்கு அரசனாகிய வாலியின் தம்பி ஆவான். வாலி தன்னை துரத்தி விட்டதாகக் கூறினான் சுக்ரீவன். உடனே இராமர் வாலியைக் கொன்று சுக்ரீவனுக்குப் பட்டம் கட்டினார். பிறகு சுக்ரீவனும் அனுமாரும் குரங்குகளும், இராமருக்குத் துணையாக வந்தனர்.
இலங்கையில் சீதை இருக்கும் இடத்தை அறிந்து வருமாறு, இராமர் அனுமாரை அனுப்பினார். உடனே அனுமார் கடலைத்தாண்டி இலங்கையை அடைந்தார். எங்கும் தேடினார். கடைசியாக அசோக வனத்தில் சீதை இருப்பதைக் கண்டார். இராமர் கூறிய செய்திகளைக் கூறிவிட்டு திரும்பி வந்தார். இராமரிட‌ம் வந்து பணிவுடன் சீதை இருக்கும் இடத்தைத் தெரிவித்தார்.
அனைவரும் கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்லவேண்டும். எனவே குரங்குகள் கல்லையும் மரத்தையும் கொண்டு கடலில் அணைகட்டின. அவ்வணையின் வழியாக அனைவரும் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென்றனர்.

வீடணன்

இராவணனுக்குக் கும்பகருணன், வீடணன் என்ற இரண்டு தம்பியர் உண்டு. அவருள் வீடணன் நல்ல அறிஞன். அவன் இராவணனுக்குப் பல அறிவுரைகள் கூறினான். சீதையைக் கொண்டு போய்விட்டு விடும்படியும் சமாதானமாக வாழும்படியும் கூறினான். இராவணன் மறுத்துவிட்டான். எனவே, வீடணன், இராவணனை விட்டு விட்டு இராமர் பக்கம் வந்து சேர்ந்து கொண்டான்.
பிறகு, இராமரின் படைகளுக்கும், இராவணனின் படைகளுக்கும் போர் தொடங்கியது. போரில் இராவணன் தம்பி கும்பகர்ணன் மாண்டான். இராவணன் மகன் இந்திரசித்தும் மாண்டான். படைவீரர்கள் பலரும் மாண்டனர்.

இராவணன் மரணம்
கடைசியாக இராமருக்கும் இராவணனுக்கும் போர் கடுமையாக நடந்தது. முடிவில் இராமர் : இராவணனைக் கொன்றார். அதனைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்து ஆரவாரித்தனர். இலங்கைக்கு அரசனாக வீடணனுக்குப் பட்டம் கட்டினார் இராமர்.
இராமர் சீதையை மீட்டுக் கொண்டு அயோத்திக்குத் திரும்பி வந்தார். பரதன் இராமரிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தான். ராமர் அயோத்திக்கு அரசராக முடிசூட்டிக்கொண்டார். தம்பியர் துணையுடன் சிறந்த முறையில் நாடாண்டார். மக்கள் அனைவரும் எல்லா நலனும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.


9.கிருஷ்ணர் 
 அவதாரம்

கிருஷ்ணர் இந்து சமய கடவுளாவார். இவர் விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக வைணவர்களால் கருதப்படுகிறார். மகாபாரத்திலும் பாகவத புராணத்திலும் இவரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்து சமய பக்தி நெறியில் இவருடைய பக்தர்களே பெரும்பாலானவர்கள். இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். வருடந்தோறும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நந்நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப் படுகிறது.


கிருஷ்ணரின் கதை

இளமை
வசுதேவர், தேவகி தம்பதியினருக்கு எட்டாவது குழந்தையாக மதுராவில் கிருஷ்ணர் பிறந்தார். கொடுமைக்கார அரசனான இவரது மாமன் கம்சனிடமிருந்து காப்பதற்காக இவர் பிறந்த நாளன்றே இவரை வசுதேவர் யமுனைக்கு அப்பால் இருந்த பிருந்தாவனத்தில் யாதவ குலத்தினரான நந்தகோபர், யசோதையிடம் ஒப்படைத்தார். குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்து காலத்தைக் கழித்த கிருஷ்ணன் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார். மேலும், இவரை தாக்க கம்சனால் ஏவப்பட்டு வந்த கொடிய அசுரர்களையும் வதம் செய்தார்.

வாலிபம்

இள வயதில் பிருந்தாவனத்தில் இருந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் தெய்வீகக் காதல் புரிந்தார்.
வாலிப வயதை அடைந்தவுடன் மதுரா சென்று கம்சனை வென்று தன் தாத்தாவான உக்கிரசேனரிடம் ராஜ்யத்தை ஒப்படைத்தார். தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அர்ஜூனனுடன் நட்பு கொண்டார். பின்னர் துவாரகை எனும் ஊருக்கு மதுரா மக்களுடன் குடிபெயர்ந்தார்.

கீதை

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருட்சேத்திரப் போரில் தனது சேனையை கௌரவரர்களிடம் கொடுத்துவிட்டு தான் அர்ஜூனனின் தேரோட்டியாக பணிபுரிந்தார். இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது.

முடிவு

பின்னர் துவாரகையில் தன் மனைவியான ருக்மணியுடன் வாழ்ந்து யாதவர்களின் அரசராக விளங்கினார். ஒரு நாள் காட்டில் ஒரு வேடனின் அம்பு தாக்கி காலமானார். யாதவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு தங்களை அழித்துக்கொண்டனர். துவாரகை நகரமும் மூழ்கியது.

சமீபத்திய ஆராய்ச்சி

குஜராத்திலுள்ள துவாரகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சியில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது. அது மகாபாரத்திலும் பாகவத்திலும் கூறப்பட்டுள்ள துவாரகை நகரை ஒத்துள்ளது, மேலும் அங்கே கண்டெடுக்கப் பட்ட சங்குகள், நாணயங்கள் போன்றவை மகாபாரத்தில் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒத்துள்ளன. இதனால் உண்மையிலேயே கிருஷ்ணன் என்ற மன்னன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
10.கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பாராவார் என்பது ஒரு கூற்று.


கல்கி அவதாரம்


கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவில்  ஆகும்.


       
                     பகிர்வில் ர.சடகோபால்.BA 


திங்கள், 2 ஜனவரி, 2017

கடவுள்

கடவுளின் தரிசனம் வேண்டி பலகாலம் தவம்
இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது..பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்..கடவுளும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்று மன்னனிடம் சொல்ல..மன்னனும் தன்னுடைய விருப்பத்தை கடவுளிடம் வரமாக கேட்டான்.. எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ..அதேபோல.. ராணியாருக்கும்.. மந்திரி மற்றும் அரச குடும்பத்தினருக்கும்... நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் நீங்கள் காட்சி தரவேண்டும்.. என்று ஆவலான வரத்தை கேட்டான்.இது அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமையும் இருந்தாலும் மன்னன் வரத்தை கேட்டுவிட்டதால் கடவுளும் அதற்கு சம்மதித்தார்..
"அதோ தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை அங்கே அனைவரையும் அழைத்துக்கொண்டு வா..காட்சி தருகின்றேன்" என்று சொல்லி மறைந்தார்..மன்னனும் நாட்டில் அனைவருக்கும் தண்டோரா போட்டு அரச குடும்பத்தினருடனும்.. மக்களுடனும்.. மலையை நோக்கி புறப்பட்டான்.. அனைவரும் கடவுளை காணும் ஆவலில் மலையேற துவங்கினர்..சிறிது உயரம் சென்றவுடன்.. அங்கே செம்பு பாறைகள் தென்பட்டன..உடனே, மக்களில் நிறைய பேர்.. செம்பை மடியில் கட்டிக்கொண்டு.. சிலர் பாறைகளை உடைத்து தலையில் வைத்துக் கொள்ளவும்ஆரம்பித்தனர்.மன்னன் "அனைவருக்கும் கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது... இதெல்லாம் அதற்க்கு முன்னால் ஒன்றுமே இல்லை அனைவரும் வாருங்கள்" என்று உரக்க சப்தமிட்டான்..அதற்கு "மன்னா இப்பொழுது இதுதான் தேவை கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்வது" என்று ஒட்டுமொத்தமாக கூட்டத்தில் குரல் எழும்பியது.. எப்படியோ போங்கள் என்று மீதி இருப்பவர்களை அழைத்துக்கொண்டு மலையேறதுவங்கினான் மன்னன்..மலையின் சில மைல் தூரத்தை கடந்தவுடன் அங்கே வெள்ளியிலான பாறைகளும்..வெள்ளி துண்டுகளும் நிறைய இருந்தன..அதை பார்த்த கொஞ்சம் மீதி இருந்த மக்கள் ஓடிச்சென்று மூட்டைகட்ட ஆரம்பித்தனர் மன்னன் மறுபடியும் மக்களுக்கு உரக்க சொன்னான்.."விலைமதிக முடியாத கடவுளின் காட்சி கிடைக்கபோகின்றது அதற்க்கு முன்னால் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்கு பயன்பட போகின்றன" என்று உரைத்தான். மன்னா இப்பொழுது கடவுளின் காட்சியை விட வெள்ளிக்கட்டிகளே பிழைப்புக்கு உதவும் என்று சொல்லிக் கொண்டே மக்கள் முடிந்த அளவு அள்ள துவங்கினர். உங்கள் தலையெழுத்து என்று சொன்ன மன்னன்.. மீதி இருந்த ராஜ குடும்பத்தினரோடு மலையேற ஆரம்பித்தான். இப்பொழுது சிறிதுதொலைவில் தென்பட்டது தங்கமலை.. ராஜகுடும்பத்தினர் பாதிபேர் அங்கே சென்றுவிட..மீதி இருந்தவர்கள் ராணியும்..மந்திரியும்,தளபதியும், மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே..சரி வாருங்கள்.. செல்வோம் என்று மீதி இருந்தவர்களை அழைத்துக்கொண்டு முக்கால் வாசி மலையை கடந்திருப்பான் மன்னன்.. அங்கே தென்பட்டது வைரமலை அதைப்பார்த்த ராணி முதற்கொண்டு அங்கே இருந்தவர்கள் ஓடிவிட..மலையின் உச்சியில் தன்னந்தனியாக போய் நின்றான் மன்னன்.. கடவுள் மன்னன் முன் பிரத்யட்சம் ஆகி "எங்கே உன் மக்கள்" என்றார்..மன்னன் தலை குனிந்தவனாக "அவர்களது வினைப்பயன் அவர்களை அழைத்து சென்றது அய்யனே.. என்னை மன்னியுங்கள்" என்றான் மன்னன்.. அதற்கு கடவுள் "நான் யாராக இருக்கின்றேன் எப்படி இருக்கின்றேன் என்று கோடியில் ஒரு சிலரே அறிவார்கள். அப்படிபட்டவர்களுக்கே எமது காட்சி என்பது கிட்டும்..உலக இச்சைகள் என்ற சேற்றை பூசிக்கொண்டவர்கள் சிலருக்கு உடல்..செல்வம்..சொத்து... என்ற செம்பு.. வெள்ளி..தங்கம்..வைரம்..போன்ற ஏமாற்றும் மாயைகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்.. இவற்றையெல்லாம் கடந்து இச்சையற்ற நிலையில் இருப்பவரே எம்மை அடைவர்" என்று சொல்லி காட்சியை நிறைவு செய்தார் கடவுள்.


                
                   பகிர்வில் ர.சடகோபால்.BA 

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...