திங்கள், 19 ஜனவரி, 2015

மதமத்தை வேர் வசியம்

மதமத்தை (பொன்னூமத்தை வேர்)


வசிகரமாம் மதமத்தை மூலம் வாங்க 
     மந்திரத்தை கேள் சொல்வோம் மைந்தாநீதான் 
வசிகரஞ்சேர் கீறிணி வருணியாரே
     மதர்னாமீ சீவி வசியம் பவ்வே 
வசிகரங்க்கான் சாக்காயுப் பருவம் நோக்க 
     வந்து நிற்கும் பருவமதில் சமூலம் வாங்கி 
வசீகரமாய் நிழலுலர்த்தி தைலம் வாங்கி 
     மைந்தனே குப்பிலே அடைத்திட்டாயே
அடைத்ததற்கு வகைகேளு பணந்தான் வாங்கி 
      அதிற்பாதி கற்பூரம் போட்டு தேய்த்து 
படையடைத்து புருவமத்தி திலந்தீட்டு 
      போதுவாறே நினைத்த பெண்கள் வந்து சேரும் 
                                                                                                      -கருவூரார் 

பொருள்:
            மதமத்தை மூலிகையை எடுப்பதற்கு "கீறிணி வருணீ மதர் நாமீ சீவீ 
வசியம் பவ்வே "

 என்று மந்திரம் ஜெபித்து மதமத்தை காயாக இருக்கும் பருவத்தில் மூலமாக எடுத்து நிழலில் உலர்த்தி குழித்தைலம் எடுத்து குப்பியில் அடைத்துகொள் . மேற்படி மதமத்தை தைலத்தை பணவெடை எடுத்து அரை பணவெடை பச்சை கற்பூரம் சேர்த்து கலந்து புருவ மத்தியில் போட்டிட்டு கொண்டு எந்த பெண்ணை நினைத்தாலும் அவள் வசியமாகி உன்னிடத்தில் வந்து சேர்வாள் .

                             பகிர்வில் ர.சடகோபால்.BA 

குப்பைமேனி வேர் ஆக்ருஷ்ணம்

தோற்றுமடா மேனியொன்று தனித்து நின்றால் 

    சுத்தி செய்து பால் பொங்கல் இட்டுப்பின்னும் 
மாற்றமுடன் கலைக்கொம்பால் கெல்லிக்கொண்டு 
    மந்திரந்தான் துட்டமிருக ஆகர்ஷணி 
ஏற்றமுயர் விசுவாமித்திர சுவாகாவென்று 
    சொல்லியே வாங்கிதன் வாயிற்போட 
ஆற்றமுடன் மிருகங்கள் தன்னை நோக்கி 
    அழைத்துடனே மிருக ஆக்ருஷ்ணமுமமே.
                                                                                            -கருவூரார் 

பொருள்:
                     குப்பைமேனி செடி தனியாக முளைத்திருந்தால் அந்த இடத்தில் சுத்தம் செய்து பால்,பொங்கல் வைத்து மான் கொம்பால் கொத்தி 
"துட்ட மிருக ஆகர்ஷணி ஏற்றமுயர் விசுவாமித்திர சுவாகா "     என்று மந்திரம் சொல்லி வேரை பிடுங்கி  வாயில் அதக்கிக்கொண்டு மிருகங்களை அழைக்க அவை வரும் .

                                      பகிர்வில் .ர.சடகோபால்.BA       

பச்சோந்திவித்தை

ஒரு பவுன் தங்கம் வாங்கி அதை இரண்டு காசாக அடித்து, ஒன்று லக்ஷ்மி ஒன்று விஷ்ணு  உருவம் பதித்து எடுத்து கொண்டு,இரண்டு பச்சோந்தி, ஆணும் ,பெண்ணும் புணரும் சமயம் பிடித்து வந்து , ஆணின் வாயில் பெண் காசும் ,பெண்ணின் வாயில் ஆண் காசும் செலுத்தி, ஆற்றில் அக்கறையில் ஒன்று இக்கறையில் ஒன்று புதைத்து, நடு ஆற்றில் நின்று கொண்டு பைரவ மந்திரத்தை தினம் 1008 உரு வீதம் ஏழு நாட்கள் ஜெபம் செய்தால், ஆண் பச்சோந்தி பெண் பச்சோந்தியுடன் வந்து சேரும். உடனே எடுத்து அந்த பச்சோந்திகளை ஆற்றில் வீசி விட்டு அந்த காசுகளை பத்திரப்படுதிக் கொள்ளவும்.  

           இதில் பெண் உருவம் உள்ள காசை ஒரு பெட்டியில் வைத்து விட்டு ,
ஆண் காசை விற்பனை செய்து விடலாம், அது பெண் காசு உள்ள பெட்டிக்கு வந்து விடும். இதை தினம் விற்றாலும் நம்மிடம் வந்து சேரும், பெண் காசு எங்கு உள்ளதோ அங்கு ஆண்  காசு வந்து விடும். இதை ஏழைகளிடம் விற்பனை செய்வது பாவமாகும். உலோபி, கருமி,சண்டாளன் , இவர்களிடம் விற்பனை செய்து ஏழைகளுக்கு உதவலாம்.

பைரவ மந்திரம்:
                                ஓம் ஹ்ரீம் வாம் வடுகாயா ஆபத்தாறணாய வடுகாய ஹ்ரீம் ஓம்...."

 இந்த மந்திரத்தை ஜெபம் செய்ய வேண்டும்.


                                 பகிர்வில் ர.சடகோபால்.BA     

எட்சிணி வசிய மந்திரம்

நல்ல வாரமும், நல்ல நட்சத்திரமும், நல்ல வேளையும் கூடிய சுப தினத்தில் சக்தி பூஜை செய்து கீழ் கண்ட மூலமந்திரத்தை 1008 உருவாக , 48 நாட்கள் ஜெபித்து கடைசி நாளில் யட்சணிக்கு பூஜை முடித்துக்கொள்ளவேண்டும் .
இது மஹா ஆச்சர்ய பலன் அளிக்கும்.

           

மூலமந்திரம்:
                            "ஸ்ரீம் இரீம் அவ்வும் மவ்வும் நமசிவாய சுவாகா"

பலன்:
               பால்,பழம் ,தேங்காய் முதலிய வஸ்துவும்; ஆபரணம், நாணயம் முதலியதும்; உடை  முதலியனவும் அளிக்கும்.

                              பகிர்வில் ர.சடகோபால் .BA 

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து


இந்து திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?
இந்திய தேசத் திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டு. வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர் மூச்சுடன் உறுதியான மனம் கொண்டவன் என்ற பொருளும், அருந்ததி என்ற பெயருக்கு கணவனின் எண்ணம் அறிந்து கற்பு நெறியுடன் வாழ்பவள் என்ற பொருளும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வஸ்து என்றால் பஞ்சபூதங்கள் என்றும், வசிஷ்தா என்றால் பஞ்ச பூதங்களில் ஐக்கியமானவன் என்றும் பொருள் உண்டு. திருமண பந்தத்தில் இணையும் நாள்வரை, மணப் பெண்ணானவள் தன்னையும் தன் உடலையு ம் காமக்கண்ணுடன் பிறர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர்ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொள்வதுடன், தன்னைத் திருமணம் செய்து கொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்கரத்தை கணவனுக்கு முழுமையாகக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள்; கணவனிடம் சரணாகதி அடைகிறாள். பெண்ணின் கழுத்தில் மங்கல நாண்சூடிய கணவன் மணப் பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுடனும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மி மீது வைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியைச் சூட்டு கின்றேன் என்று கூறுகின்றான். மணப்பெண்ணானவள், தன் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜென்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின்றாள். அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்தப்படுத்திக்கொண்டு ஆணையும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்துக்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரியாகத் திகழ்கின்றாள்.


        பகிர்வில் ர.சடகோபால் .BA 

பஞ்சாட்சரம்

பஞ்சாட்சரம் மூன்று விதம்


                                      
           

மூன்று  வித பஞ்சாட்சரம்

                                    ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய

                                    சூட்சும பஞ்சாட்சரம் - சிவயநம

                                    காரணபஞ்சாட்சரம் - சிவ சிவ 

                       ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய

நமசிவய” என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து “ஓம் நமசிவய” என்று உச்சரிப்பதே மரபாகும். சித்தர்கள் இம் மந்திரத்தை பஞ்சபூதங்களின் ஒருமித்த வெளிப்பாடகவே உணர்ந்தனர். இம் மந்திரத்தில் சித்தி அடைவதால் பஞ்சபூதங்கள் கட்டுப்படுவதொடு ஐம்பொறிகளும் நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும். பஞ்சபூதங்களில் இம் மந்திரத்தின் ஆளும் தன்மை

                                 ந – நிலத்தைக் குறிக்கிறது,
                                 ம – நீரைக் குறிக்கிறது,
                                 சி – நெருப்பைக் குறிக்கிறது,
                                 வ – காற்றைக் குறிக்கிறது,
                                 ய – ஆகாயத்தைக் குறிக்கிறது


ந - கிழக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, மஞ்சள் நிறம், கௌதம மகரிஷி

ம – தெற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, கருப்பு நிறம், அத்திரி மகரிஷி

சி – மேற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, புகையின் நிறம், விஸ்வாமித்ர மகரிஷி

வ – வடக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, பொன்னிறம், ஆங்கீரஸ மகரிஷி

 ய –மேல் நோக்கிய திருமுகத்திற்கு உரியது, சிவந்த நிறம், பரத்வாஜ மகரிஷி 


                               சூட்சும பஞ்சாட்சரம்

சிவய நம” என்பது சூட்சும பஞ்சாட்சரம் ஆகும். இம் மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து “ஓம் சிவய நம” என்றே உச்சரிக்க வேண்டும். சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம் எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து ‘அ’ காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து ‘உ’ காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து ‘ம’ காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது.

அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே”

“சிவய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லையே”

திருவாய் பொலியச் சிவய நம என்று நீறணிந்தேன்தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே”

“சித்தம் ஒருங்கிச் சிவய நம என்று இருக்கினல்லால்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே...”

                           காரண பஞ்சாட்சரம்

 சிவ சிவ என்பது காரணப் பஞ்சாட்சரம் என வழங்கப்படும்.சிவ சிவ எனும் மந்திரம் நமது காரண சாரத்தில் உள்ள பிறப் பதிவுகளை நீக்க வல்லது என்பது ஞானியாரின் அழ்ந்த கருத்து. இந்த மந்திரத்தில் சாதாரண உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட, ஞான நிலைக்கு ஒருவரை இட்டு செல்லக்கூடியது. ஆகையால் இந்த மந்திரத்தின் மூலமாக லவ்கீக லாபங்களை எதிர் பார்க்க முடியாது. அதாவது உலகியல் குறிகோள்களை பூர்த்தி செய்த ஒருவருக்கு (துறவு நெறி பூண்டவர்களும், மிக வயதானவர்களும்) இந்த மந்திரம் பொருத்தமானது.

             “சிவ சிவ என்றிடத் தீவினை மாலும்
              சிவ சிவ என்கிலார் தீவினையாளர்
              சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
             சிவ சிவ என்னச் சிவ கதி தானே”


                                              பகிர்வில் ர.சடகோபால் .BA 

சிவவாக்கியம்

சிவவாக்கியர் - சிவவாக்கியம் ​- கடவுள் 

  

                                               


கடவுள் இருக்கின்றானா

சித்தம் என்றால் உயிர் சித்தர்கள் என்றால் உயிரை உணர்ந்தவர்கள் என்று பொருள்.

சித்தர்கள் தனது தவத்தின் மூலம் கடவுள் நிலை உணர்ந்தார்கள். கடவுள் நிலை உணர்ந்த சித்தர்கள் கடவுளைப் பற்றி சாதாரண மனிதர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனே  பல்வேறு பாடல்களை இயற்றியுள்ளனர்.

அந்த பாடல்கள் ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டு ஆன்மா வளர்ச்சி அடைந்த மனிதர்களின் பல்வேறு நிலைகளுக்கு ஏற்ப புரியும் விதத்தில் அமைந்திருப்பது தான் அந்த பாடல்களின் சிறப்பாகும்.

மேலும் சித்தர்கள் தங்கள் பாடல்களில் கடவுளைப் பற்றியும், கடவுளை அடையும் வழிகளைப் பற்றியும் , மருத்துவம் , சோதிடம் என்று பல்வேறு வாழ்வியல் நெறிமுறைகளைப் பற்றியும், இந்தச் சமுதாயம் பயன் பெறும் வகையில் குறியீடுகளாக அமைத்திருக்கின்றனர். 

ஆத்தகைய சிறப்பு வாய்ந்த பாடல்களை பல்வேறு சித்தர்கள் பல்வேறு நிலைகளில் இந்த உலகம் பயன்பெறும் வகையில் பாடியுள்ளனர்.

அதில் சிவவாக்கியர் பாடல்கள் சிலவற்றை இங்கே நினைவு கூர்வோம்.


கடவுள் உள்ளே இருக்கிறான் :

கடவுளைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்களைப் பற்றி சிவவாக்கியர் கீழ்க்கண்ட பாடலைக் குறிப்பிடுகிறார்.


               ””””ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
                      நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
                      வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்காள்
                      கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே”” 
                                                                         -----------சிவவாக்கியர்-----

நமது உடலில் சோதி வடிவமாக உள்ள இறைவனை நமது உடலில் எந்த இடத்தில் இருக்கிறான் என்று தெரியாமல் அவனை அடையக் கூடிய வழி புரியாமல் பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளை செய்து நமது பிராணனை ஓட விட்டு சோதி வடிவமாக உள்ள இறைவனை அடைய முடியாமல் நாட்களை கழித்து மனம் வாடி இறந்து போன மனிதர்கள் எண்ணிக்கையில் அடக்க முடியாத கோடி என்கிறார் சிவவாக்கியார் .

நமது உடலில் கடவுள் இருக்கிறான் என்று தெரிந்தும் அதை அடைய முடியாமல் இறந்தவர்களே கோடி கணக்கில் என்றால் கடவுளை வெளியே தேடி அலைந்து கொண்டிருப்பவர்களை எண்ணிக்கையில் கூற முடியாது என்று சிவவாக்கியர் மனம் வருந்தி பாடுகிறார் .



கடவுள் வெளியே இருக்கிறான்:

கடவுள் உள்ளே இருக்கிறான் என்று தெரிந்தும் அதை அடைய முடியாமல் இறந்தவர்களைப் பற்றி பாடிய சிவவாக்கியர் கடவுளை வெளியே தேடி அலையும் மனிதர்களைப் பற்றி மிகவும் கோபாவேசமாகப் பாடுகிறார்.



                    ””””நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பஞ் சாற்றியே
                          சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்திர மேதடா
                          நட்டகல்லும் பேசுமோ நாதனுள்ளி ருக்கையில்
                          சுட்டசட்டி சட்டுவங் கறிச்சுவைய றியுமோ”” 
                                                              ---------சிவவாக்கியர்--------



ஒரு கல்லை நட்டு அதை தெய்வம் என்று சொல்லிக் கொண்டு பூக்களை அதற்கு சூட்டி அந்த கல்லை சுற்றி சுற்றி வந்து தான் நினைத்த காரியம் நிறைவேறுவதற்காக அந்த கல்லை எந்த தெய்வம் என்று நினைக்கிறார்களோ ,

அந்த தெய்வத்திற்குரிய மந்திரங்களை உச்சாடணம் செய்து தனது காரியத்தை நிறைவேற்றச் சொன்னால் நட்ட அந்த கல்லுக்குள் இருக்கும் கடவுள் உன் கோரிக்கையை நிறைவேற்றுகிறேன் என்று சொல்லுமா என்கிறார.



மேலும் சாப்பிடுவதற்காக சட்டியில் காய்கறிகளைப் போட்டு செய்யும் குழம்பு ,ரசம் ,பொறியல் போன்றவற்றின் சுவையை சமைப்பதற்கு பயன்படுத்தப் படும் சட்டி எப்படி அறியாதோ 

அதைப் போலவே தெய்வம் என்று நம்பி நட்ட கல்லும் நம்முடைய உணர்வுகளை உணர்ந்து கொள்ள முடியாது என்கிறார்.


கடவுள் நம் உள்ளே இருக்கிறான் என்று உணராமல் கடவுளை வெளியே தேடிக் கொண்டு அலையும் மனிதர்களின் முட்டாள்தனமான முறைகளின் மூலம் கடவுளை வணங்குகிறவர்களின் செய்கைகளைத் தான் சிவவாக்கியர் கண்டிக்கிறாரே தவிர ,

கடவுள் இல்லையென்று நாத்திகவாதி போல் நாத்திகம் பேசவில்லை.

இனிமேலாவது சிவவாக்கியரை நாத்திகர் என்று பேசுவதை தயவு செய்து தவிர்ப்போம்.



மறுபிறப்பு


”””கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணெய் மோர்புகா
                  உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
                  விரிந்தபூ வுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா
                  இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை இல்லையே”” 
                                                                        ----------சிவவாக்கியர்-----


கறந்தபால் முலைப்புகா:
பசுவின் மடியிலிருந்து கறக்கப்பட்ட பாலை மீண்டும் அதன் மடியில் கொண்டு சேர்க்க முடியாது , அதாவது முலையிலிருந்து கறக்கப்பட்ட பால் என்று சொல்லும்போது உலகில் வாழும் பெண் உயிரிகளின் முலையிலிருந்து கறக்கப்பட்ட பாலை மீண்டும் அதன் முலை வழியாக அதன் உடலுக்கு உள்ளே செலுத்த முடியாது என்று பொருள்.




கடைந்தவெண்ணெய் மோர்புகா:
மோரை நன்றாக கடைந்தால் அதிலிருந்து வெண்ணெய் தனியாக பிரியும் .

தனியாக பிரித்து எடுக்கப்பட்ட வெண்ணெயை மீண்டும் மோரினுள் செலுத்தி அதை பழையபடி மோராக மாற்ற முடியாது.



உடைந்துபோன சங்கினோசை (உயிர்களும்) உடற்புகா:
உடைந்து போன சங்கின் ஓசை என்றால் சங்கிலிருந்து தனியாக பிரிந்த ஓசை என்று பொருள்.

சங்கை ஊதும் போது அதில் இருந்து ஓசை எழுப்பப் படுகிறது. எழுப்பப்பட்ட ஓசையானது காற்றில் கலந்து விடுகிறது.
அவ்வாறு காற்றில் கலந்த ஓசையை தனியாக பிரித்து மீண்டும் அந்த சங்கினுள் கொண்டு சென்று அடைக்க முடியாது.




விரிந்தபூ யுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா:
மரத்திலிருந்து தனியாக பிரிந்து கீழே விழுந்த பூவும் மரத்திலிருந்து தனியாக பிரிந்து கீழே விழுந்த காயும் மீண்டும் போய் மரத்தில் இணையாது இணையவும் முடியாது.

பூவிரிந்தால் அதாவது மலர்ந்தால் மீண்டும் அது மொட்டாக முடியாது என்று சிலர் அதற்கு அர்த்தம் சொல்கிறார்கள் .

இந்த பாடலில் உள்ள கருத்துக்களை ஊன்றி கவனித்தால் ஒன்று மற்றொன்றாக ஆவதைப் பற்றி சொல்லவில்லை . ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிவதைத்தான் சொல்கிறார்கள்.

எனவே மரத்திலிருந்து பூ உதிர்ந்து கீழே விழுவதையும் , மரத்திலிருந்து காய் உதிர்ந்து கீழே விழுவதையும் , உற்று நோக்கினால் ஒன்றிலிருந்து ஒன்று பிரிவதைத் தௌ்ளத் தெளிவாக உணரலாம்.




இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை யில்லையே:
பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப இந்த ஜென்மம் ஏற்படுகிறது. இந்த ஜென்மத்தில் கர்ம வினைகள் அனைத்தையும் கழித்து விட்டால் முக்தி ஏற்படும் இல்லையென்றால் செய்த கர்மவினைகளுக்கு ஏற்ப மறு ஜென்மம் ஏற்படுகிறது.

இங்கே ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் பிறவி என்பது வேறு. ஜென்மம் என்பது வேறு. பிறவியைப் பற்றி பிறகு தெரிந்து கொள்ளலாம். இபபொழுது ஜென்மத்திற்குள் செல்லலாம்.

ஒரு ஆன்மாவுக்கு 7 ஜென்மம் 7 ஜென்மத்திற்குள் அந்த ஆன்மாவானது தனது கர்ம வினையை கழிக்கா விட்டால் 7x7= 49 ஜென்மம். 49 ஜென்மத்திற்குள்ளும் தனது கர்ம வினையை கழிக்காவிட்டாலும் அந்த ஆன்மாவானது  தானாகவே தனது பயணத்தை முடிக்க சுத்த வெளியில் கலந்து விடும்.

அதனால் தான் நாம் அடிக்கடி ஏழேழு ஜென்மம் என்று சொல்வதற்கு காரணம்.

இந்த ஜென்மத்தில் நாம் நம் கர்ம வினைகள் அனைத்தையும் கழித்து விட்டால் முக்தி கிடைக்கும். முக்தி கிடைத்து விட்டால் நமக்கு மறு பிறப்பு கிடையாது. 

யாருக்கு பிறப்பு கிடையாதோ அவருக்கு இறப்பு கிடையாது. பிறப்பு இறப்பு அற்ற நிலை எப்படி கடவுளுக்கு உண்டோ அப்படியே நமக்கும்.


””””தத்வமவே த்வமேவதத்””  அதாவது நீயே அது அதுவே நீ என்ற நிலை உருவாகி விட்டால் பிறப்பு இறப்பு கிடையாது. பிறவிச் சுழல் கிடையாது மறுஜென்மம்  என்பது கிடையாது.

உடலிலிருந்து உயிர் பிரிந்து விட்டால் உயிரின் கர்ம வினை கழிந்து விட்டால் மறு பிறப்பு கிடையாது. உயிரின் கர்ம வினை கழியா விட்டால் மறு பிறப்பு உண்டு.

இங்கே இந்த பாடலில் உயிர்களும் உடற்புகா என்றால் தனது கர்ம வினையை கழித்து விட்டு முக்தி அடைந்த ஆன்மாவானது பிறப்பு எடுக்க மீண்டும் ஒரு உடலைத் தேடிச் சென்று இணையாது என்று பொருள்.

இறந்தவர் என்றால் கர்ம வினையை கழித்து விட்ட ஆன்மா.
இறந்தவர் பிறப்பதில்லை என்றால் கர்ம வினையை கழித்து விட்டு முக்தி அடைந்த ஆன்மா பிறப்பதில்லை என்று பொருள்.

இந்த பாடலின் மூலம் சிவவாக்கியார் என்ன சொல்ல வருகிறார் என்றால்

பரிணாம வளர்ச்சியில் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து விட்டால் மீண்டும் அது பழைய நிலைக்கு திரும்பாது , இணையாது குரங்கிலிருந்து மனிதன் பிரிந்து வந்து விட்ட பிறகு குரங்கு குரங்காக இருக்கிறது . மனிதன் மனிதன் மனிதனாக இருக்கிறான் . இரண்டு வேறு பட்ட நிலை உருவாகி விட்டது.


அதைப் போல

உடலிலிருந்து பால் பிரிந்து விட்டால் பால் வேறு உடல் வேறு.

மோரிலிருந்து வெண்ணெய் பிரிந்து விட்டால் மோர் வேறு வெண்ணெய் வேறு.

சங்கிலிருந்து ஓசை பிரிந்து விட்டால் சங்கு வேறு ஓசை வேறு.

மரத்திலிருந்து பூ பிரிந்து விட்டால் மரம் வேறு பூ வேறு.

மரத்திலிருந்து காய் பிரிந்து விட்டால் மரம் வேறு காய் வேறு.

அதைப்போல பல்வேறு ஜென்மங்களாக உடலோடு ஒட்டி வந்த உயிரானது கர்ம வினைகளை தீர்த்து முக்தி அடைந்து விட்டால் உயிரானது வேறு உடலைச் சென்று சேராது மறுபிறப்பு எடுக்காது.

உடல் வேறு உயிர் வேறு என்று ஆகிவிடும்”” என்று சொல்கிறார்.


இறந்தவர் பிறப்பதில்லை என்பதன் மூலம் சிவவாக்கியர் மறு பிறப்பு இல்லை என்று சொல்ல வரவில்லை.

எந்த உயிருக்கு மறு பிறப்பு உண்டு எந்த உயிருக்கு மறுபிறப்பு இல்லை என்று தான் சொல்ல வருகிறார்.

                                            பகிர்வில் ர.சடகோபால் .BA 

ஸ்ரீ சொர்ண யட்சணி மஹா மந்திரம்


ஸ்ரீ சொர்ண யட்சணி மஹா மந்திரம் 

 மூல மந்திரம்:
                                " ஓம் ஸ்ரீம் க்லீம் சொர்ண ஆகர்சணி சௌம் க்லீம் ஓம் 
சொர்ண யட்சணி யஷ குல நாயகி மமவசம் குருகுரு சுவாகா "

நிவேதனம்      : 
                                   பால் , பழம் , சுண்டல் , தேங்காய் ,வடை , பால் பாயசம் ,
 வெற்றிலை பாக்கு , வைத்து தீபதூபம் காட்டி செபிக்க.
பிரயோகம்     : 
                                  மனதை ஒரு நிலை படுத்தி 1008 உரு வீதம் ஒன்பது நாட்கள்  செபிக்க ஸ்ரீ சொர்ண யட்சணி தேவி  குழந்தை வடிவில் 
தரிசனம் தரும். உடனே தூபம் காட்டி வணங்கி கொள்ள வேண்டும் .

பலன்                 :
                                முக்காலமும்  நம் காதில் கூறும் , மறைமுகமாக 
தனம் கொடுக்கும்  அதை அன்று முழுவதும் செலவு செய்ய வேண்டும் . 
மது ,மங்கை ,சூது , என் செலவு செய்தால்  கொடிய துன்பத்திற்கு ஆளாக நேரிடும்.  மற்றும் இந்த தேவதையால் வாக்கு  பலிதம்  உண்டாகும் . இன்னும் பல அற்புதமான செயல்கள் செய்யும் .

   குறிப்பு     
                                      எந்த ஒரு தெய்வ தேவதைகளும் அதற்குரிய யந்திரம் ,மை  மூலிகை  இருந்தால் மட்டுமே சித்தி பெற முடியும் . என்பதை கவனம் கொள்ள வேண்டும் .........

                              பகிர்வில் ர.சடகோபால் .BA 

சிவ மார்கம்


சிவனை ஐந்து முகம் உடையவனாக புராணங்கள் கூறும் நான்கு முகம் நான்கு பக்கமும் ஒரு முகம் ஆகாயத்தை நோக்கியும் அமையபட்டிருக்கும்.
"ஈசானம்,தத்புருஸம்,அகோரம்,வாமதேவம், சத்தியோசாதம்" . என்பது அவற்றின் பெயர்களாகும். ஐந்து முகம் ஒவ்வொன்றுக்கும் இருபத்தைந்து அட்சரம் என அமையும் அவை "நமசிவாய",சிவாயநம",வயநமசி",,மசிவய ந",யவசிநம.என்பது. இதில் அறுபதினாலு சித்துகளும் அடங்கி நிற்கும். ஐந்து முகமுடைய இது முழுமையை சேர்க்கும் தூய்மையானவர்களுக்கு இதன் தன்மை விளங்கும். ஐந்து அட்சரங்களும் ஐம்பதியொரு அட்சரங்களாக விரிந்து நிற்கும். ஒவ்வொன்றையும் கூறி வாழ்ந்த உரையும் இல்லை,கரையும் இல்லை, இந்த அட்சரங்கள் தக்க கருக்களுடன் சேர்ந்து விட்டால் வேரும் இல்லை,தூரும் இல்லை. தக்க மருந்துடன் தக்க மந்திரமும் சேர தகுந்த பலன் கிடைக்கும்.


           பகிர்வில் ர.சடகோபால்.BA 

பெண் வசியம்


                      
                                 

நல்ல அமிர்த யோகம் கூடிய வெள்ளிகிழமை அன்று மிளகுசாரணை செடிக்கு காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து பொங்கலிட்டு எலுமிச்சை பலி கொடுத்து ஆணி வேர் ஆறாமல் பிடுங்கி வெள்ளி தாயத்தில் அடைத்து கையில் கட்டி கொள்ள சகல பெண்களும் வசியமவார்கள் . நம் எண்ணப்படி  நடந்து   கொள்வார்கள். 

                                               பகிர்வில் ர.சடகோபால்.BA

உடலும் ஆன்மாவும்



உடலை விட்டு ஆன்மா  பிரிந்து விட்டால் அந்த உடலுக்கு யாதொரு மதிப்பும் கிடையாது. ஒன்று உடலைச் சுட்டெரித்து விடுகிறோம் அல்லது புதைகுழிக்குப் போகிறது. ஆக உயிர் தங்கி இருக்கும் வரையில்தான் இந்த உடலுக்கு அவசியமும், தேவையும், மரியாதையும் இருக்கிறது.


இப்படிப் பட்ட இந்த உடலும், உயிரும் எப்போது எப்படித் தோன்றுகின்றன?

எது முதலில் உருவாகிறது?, உடலா?, உயிரா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அகத்தியர் தனது "அகத்தியர் ஆயுள் வேதம்”என்ற தனது நூலில் பதில் வைத்திருக்கிறார்.

சென்மமனிதர் தாமுஞ் சென்மிக்கும்வாறு கேளாய்
இன்னமுஞ் சுக்கிலத்தில் பிராணவாய்வதுவுஞ் சென்று
தின்னமாய் பிராணவாயுவு சென்றது கோபமுற்றி
யுன்னுமாமி ரத்தஞ்சூழ்ந்து வுதாரணவாய் வளர்க்கம்
சூழ்ந்து சுக்கிலதில் சுரோணிதங் கலக்குமென்று
பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திடும் குமிழிபோல
ஏந்தியே திரளுமேழிலீரேழு தன்னிலூர்க்கு மாய்ந்த
நாளிருபத்தைந்தி லருங்முளை போற்றோன்றும்

- அகத்தியர்.

ஆணின் சுக்கிலத்தில் பிராணவாயு சென்றடைந்து கிளர்ச்சியுற்று உயிரணுக்கள் வளர்ச்சி அடையும். இந்த சமயத்தில் ஏற்படும் உறவினால், பெண்ணின் சுரோணியத்துடன் ஆணின் சுக்கிலம் கலந்து வாத, பித்த, கபம் என்று சொல்லப்படும் மூன்று விகற்பங்களும் அதனுடன் சேர்ந்து சிறு குமிழி போலாகி கருப்பையின் உட்சென்று தங்கி வளரத் துவங்கி, இருபத்தி ஐந்து நாளில் முளை போல தோன்றும் என்கிறார். இது உயிரற்ற ஒரு நிலை.

முந்திய திங்கள்தன்னில் கருமுளைத்தது கட்டியாகும்
பிந்திய திங்கள் தன்னிற் பிடரிதோள் முதுகுமன்றி
யுதிக்கும் மூன்றாந்திங்க ளுடல்விலா யரையுங்கால்கள்
ளுந்திக்கு யுயிரும்வந்தே யிணைந்திடுமென்றே.

- அகத்தியர்.

முதல் மாதத்தின் முடிவில் உருவான இந்த முளை பின்னர் வளர்ந்து ஒரு கட்டிபோல உருவாகுமாம். இரண்டாவது மாதத்தில் பிடறி, தோள், முதுகு ஆகிய பாகங்கள் உருவாகுமாம். மூன்றாவது மாதத்தில் உடல், விலா, இடுப்பு போன்றவைகள் உருவாகும்.அந்த கட்டதில் தான் கருவிற்கு உயிரும் வந்து இணையும் என்கிறார்.

ஆக,கருவானது மூன்றுமாத வளர்ச்சியின் பின்னரே உடலில் உயிர் வந்து சேருகிறது. அதன் பிறகே மற்ற அவயங்கள் வளரத்துவங்குகிறது.

இந்த தகவல்கள் எல்லாம் அறிவியல் வளராத பலநூறு வருடங்களுக்கு முன்னரே நமது முன்னோர்களால் தீர ஆராய்ந்து சொல்லப் பட்டிருக்கின்றன என்பதில்தான் இந்த தகவலின் மகத்துவமே அடங்கி இருக்கிறது. உடற்கூறியியலில் சித்தர் பெருமக்களின் ஆழ்ந்த அறிவு இன்றைய நவீன அறிவியலின் தெளிவுகளுக்கு கொஞ்சம் குறைந்ததில்லை என்பது நாம் பெருமிதத்துடன் நினைவு கூற வேண்டிய ஒன்று.

           பகிர்வில் ர.சடகோபால்.BA 

சக்தி மந்திரம்


பாரப்பா சிவபூஜை செய்துகொண்டு 
 பண்பான தேவிமந்திரம் பகரக்கேளு 
ஆரப்பா அறிவார்கள் அறிவோமென்று 
 அப்பனே ஸ்ரீசிரீங் சிவயவசி வாவென்று 
நேரப்பா சிவரூபி வாவா வென்று 
 நேர்மையுட னோர்மனதாய் நூற்றெட்டானால் 
காரப்பா சக்திசிவம் ரெண்டும்வைத்துக் 
 கருணைபெறத் தொழிற்முகத்திற் பூசைபண்ணே 
                                                                                         -அகத்தியர் பரிபாஷை 300

பொருள்:
                 இது சக்தி பூசை. தேவி மந்திரம் கேள். "ஸ்ரீ சிரீங் சிவயவசி வாவாசிவரூபி வாவா" என்று நூற்றியெட்டு உரு மன ஓர் நிலையுடன் செபிக்க வேண்டும். சக்தி,சிவம் இரண்டையும் வைத்து கருணை பெற தொழில் முகத்தில் பூசை செய்.

          பகிர்வில் ர.சடகோபால்.BA 

மயேந்திர தேவி மஹா மந்திரம்

தானான மயேந்திரையின் மூலங்கேளு 
 தன்மையுள்ள தேவியென்ற மயேந்திரை தான் 
வேனான வம்வறியும் வையும் வாவா 
 வேதாந்த மயேந்திரையாள்  தேவி றாறா
ஆனான வன்புள்ள மைந்தா கேளு 
 ஆச்சரிய மாச்சரிய மைந்தாசொல்வேன் 
மானான நாள் வித மாயிரத்தெட்டாக 
 மண்டலந்தான் னுருச் செய்ய வசியமாமே.
                                                                                       -நந்தீசர் 

பொருள்:
                       மயேந்திரையின் மூல மந்திரம் சொல்கிறேன் கேள். "ஓம் றியும் வையும் வாவா மயேந்திரை தேவி றாறா" மந்திரத்தை தினம் 1008 உரு வீதம் 48 நாட்கள் ஜெபம் செய்ய சித்தி ஆகுமாம். இது பல ஆச்சரியமான செயல்களை செய்யும்.

                             பகிர்வில் ர.சடகோபால்.BA 
                  

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...