சனி, 29 அக்டோபர், 2016

பெண்ணின் பருவங்கள்



தழிழர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக மிக முக்கியமான பெண்ணின் பருவங்கள் ஏழு...



> பேதை 1 முதல் 8 வயது வரை


> பெதும்பை 9 முதல் 10 வயது வரை...


> மங்கை 11 முதல் 14 வயது வரை...


> மடந்தை 15 முதல் 18 வயது வரை...


> அரிவை 19 முதல் 24 வயது வரை...


> தெரிவை 25 முதல் 29 வயது வரை...


> பேரிளம் பெண் 30 வயது முதல்...


பெண்மையை போற்றுவோம்...!





பகிர்வில் ர.சடகோபால்.BA

வியாழன், 27 அக்டோபர், 2016

சித்தர்கள் சொன்ன வசியங்கள்

மேன்மை பொருந்திய சித்தர்கள் அனைவருமே, உலக மக்கள் நெறி தவறாமல் வாழ வேண்டும் என்பதற்காக, யோக ஞானம், வைத்தியம், வாதம், சோதிடம், மாந்திரீங்கம் என்ற ஐந்து வகைக் காவியங்களை இயற்றித்தந்துள்ளனர். 

அந்த மாந்திரீக காவியத்தில் அட்டமாசித்துக்கள் என்ற பிரிவில், அட்டமா சித்துக்களை எட்டு பிரிவுகளாக பிரித்துள்ளனர். 
அவையாவன,

1. வசியம் :- 
இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.

2. மோகனம் :- 
இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல்.

3. ஸ்தம்பம் :- 
இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது.

4. உச்சாடனம் :- 
இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும். 

5. ஆக்ருஷணம் :- 
இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது.

6. பேதனம் :- 
இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது.

7. வித்வேஷணம் :- 
இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது.

8. மாரணம் :- 
இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது. 


இதிலே நாம் பார்க்கப் போவது வசியம் என்பதைப் பற்றி மட்டுமே. மற்றவைகளை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். இந்த வசியத்தையும் எட்டுவகையாகப் பிரித்துள்ளனர். அது,
1.ஜன வசியம்.
2.ராஜ வசியம்.
3.புருஷ வசியம்.
4.ஸ்திரீ வசியம்.
5.மிருக வசியம்.
6.தேவ வசியம்.
7.சத்துரு வசியம்.
8.லோக வசியம்...ஆகியவை.

இப்படியான வசிய வேலைகளால் நாம் பிறரிடம் இருந்தோ, பிற ஜீவராசிகளிடமிருந்தோ பல நன்மைகளைப் பெற்று வாழலாம்.

அது மட்டுமல்ல இப்படி முயற்சி செய்து மேற்கொள்ளப் படும் வசியக் கலையை எந்தவொரு தவறான காரியங்களுக்கோ, மற்றவர் வாழ்வு அழிவிற்கோ பயன்படுத்தக் கூடாது. அதனால் வரும் கேடுகள் உடனடியாக இல்லாவிட்டாலும் அவரவர் காலத்திலேயே அனுபவிக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஆகவே...

வசியக் கலையை நமது நல்வழிக்காகவும், நாம் செல்லும் நல்வழிக்கு தடங்கல் ஏற்படாமல் இருப்பதற்காகவும் பயன்படுத்தி, நாமும் வாழ்ந்து, மற்றவரையும் வாழ விடுவோம். 


             பகிர்வில் ர.சடகோபால்.BA 

திங்கள், 24 அக்டோபர், 2016

சித்தர்கள் வணங்கிய தெய்வம்




சித்தர்கள்பெண்மையை இழிவு செய்தவர்கள், அல்லது தூற்றியவர்கள் என்பதாகவே சித்தர்களைப் பற்றி பெரும் பாலானவர்களால் புரிந்து கொள்ளப் படுகிறது. அத்தகைய ஒரு எண்ணப் போக்கினை இந்தபதிவு தகர்த்திடும் என எதிர்பார்க்கிறேன்.

சித்தமெல்லாம் சிவமயமாய் திளைத்திருக்க, ஆதிசக்தியின் அருளும், ஆசியும் பூரணமாக தேவைப் படும். இதை உணர்ந்திருந்த சித்தர்கள், அத்தகைய ஆதிசக்தியின் அம்சம் ஒன்றினையே போற்றி பூசித்தனர்.இந்த அம்சம் பத்து வயதுக்குறிய ஒரு சின்னஞ் சிறிய பெண்ணின் அம்சம் என்பது ஆச்சர்யமான ஒன்று!, நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று.

இந்த உயர் தெய்வத்தைப் பற்றி கொங்கணவர் பின்வருமாறு கூறுகிறார்.

"வாலையைப் பூசிக்க சித்தரானார்
வாலைக் கொத்தாசையாய் சிவகர்த்தரானார்
வேலையைப் பார்த்தல்லோ கூலி வைத்தார்
இந்த விதம் தெரியுமோ? வாலைப் பெண்ணே!"

                                                                                                        - கொங்கணவர் -

சித்தர்கள் வணங்கிய அந்த பால தெய்வத்தின் பெயர் வாலை என்பதாகும். ஆதி சக்தியின் பத்து வயது பெண் வடிவமே இந்த வாலை. அனைத்திற்க்கும் ஆதி காரணமான இந்த வாலை தெய்வத்தையே சித்தர்கள் அகப்புற வழிகளில் பூசை செய்தார்கள். இந்த வாலையை பூசிக்காத சித்தர்கள் யாருமே இல்லை. இவள் அருமையை போற்றிப் பாடாத சித்தர்களும் இல்லை எனலாம்.

இத்தகைய வாலை தெய்வம் நமது உடலில் இருந்து இயங்குவதை உணர்ந்து கொண்டு அவளே அனைத்திற்கும் காரண காரியமாக இருந்து ஆட்டுவிப்பதை அறிந்து எல்லாவித யோகா ஞானங்களுக்கும் அவளே தலைமைத்தாய் என்று அறுதியிட்டு உரைத்த சித்தர்கள். அவளையே போற்றி பூசித்து சித்தி பெற்றனர்.

சின்னஞ்சிறு பெண்ணான வாலையின் அருளால் சித்தியடைந்து, பின் அவளை கண்ணித் தெய்வமாக வழிபட்டு படிப்படியாக மனோன்மணித் தெய்வமாக பூசை முடித்து, இறுதியில் ஆதிசக்தியின் அருள் பெற்று முக்தி நிலையான மெய்ஞான நிலையினை அடைந்தனர். இதுவே ஞானத்தின் அதி உயர் நிலையாக கருதப் பட்டது. இந்த நிலை எய்தியவர்களே சித்த புருஷர்கள்.

                 பகிர்வில் ர.சடகோபால்.BA 

வியாழன், 20 அக்டோபர், 2016

உடல் உறவு மூலம் நல்ல குழந்தை உண்டாக



நமது பாரம்பரிய ரகசியம்-


உடலுறவு மூலம் சிசு உண்டாக நல்ல நேரங்கள்:


கணவனும், மனைவியும் கூடிய நேரம் சந்திர கலையாக இருந்தால் அந்தக் கரு பெண் ஆகும்.சூரிய கலை நடக்கும் பொது உடல் உறவு கொண்டால் அந்த கரு ஆண் ஆகும்.


சுழிமுனை நடக்கும் போது உறவுக்கொண்டால் குழந்தை ஆகாது

அமாவாசையன்று கருவானால் கருப்பு நிறமாகவும்,ஆறு விரல் உள்ளதாகவும் குழந்தை பிறக்கும்

தொலை தூரம் சென்று வந்த பொழுது உறவுக்கொண்டு கருவானால் அந்தக் குழந்தை அறிவில்லாத குழந்தை ஆகும்.

அமாவாசை கழித்து பிரதமையில் கரு உண்டானால் பொய் பேசும் குழந்தை பிறக்கும்

அமாவாசைக்கு மூன்றாம் நாள் கருவானால் அந்த குழந்தை நீண்ட நாள் வாழாது.

முழு நிலவுவில் உடலுறவு கொண்டு கருவானால் முடமாகவும், தண்டியாகவும் குழந்தை பிறக்கும்.யானை வடிவில் இருக்கும்.
முழுநிலவு கழித்துப் பிரதமையில் கருவானால் சிறு வயதில் பல கண்டங்களைத் தாண்டி, நீண்ட ஆயுள் உடையதாகக் குழந்தை பிறக்கும்.

பதினைந்தாம் நாள் கூடிப் பிறந்த குழந்தை பித்தம், கருங்குட்டம், வெண்குட்டம், பித்தம், முயலகம் என்னும் நோயால் பீடிக்கும்.

புணர்ச்சியின் போது பேசக்கூடாது.பேச்சுக்களைப் பேசினால் குழந்தை அலியாகப் பிறக்கும்.

பெண்ணை நிர்வாணமாக்கிப் புணர்ந்தால் குழந்தை சோம்பேறியாகப் பிறக்கும்.

உடலுறவு கொள்ளும் பொழுது வேறு பெண்ணை நினைத்து உடலுறவு கொண்டால் அதற்குப் பிறக்கும் குழந்தை ஆறு அல்லது நான்கு விரல் உடையாதகப் பிறக்கும்.

பிறைகண்ட 3,5,8,10ஆகிய நாள்களில் எந்த உடலுறவும் கூடாது.வெள்ளிக்கிழமை மூன்றாம் ஜாமத்தில் உடலுறவு கொண்டு கருவானால்,மாறுகண் உள்ள குழந்தை பிறக்கும்.

ஒரு பெண் மாத விளக்கு ஆகி மூன்றாம் நாள் உடலுறவு கொண்டபோது கருவானால் குழந்தை திருடனாகப் பிறக்கும்.

நான்காம் நாள் கூடிக் கருவானால் குழந்தை வறுமையில் வாடும்.

ஐந்தாம் நாள் கூடிப் பிறக்கும் பிள்ளை கல்வியில் சிறந்து விளங்கும்.

ஆறாம் நாள் கூடிக் கருவானால் பெரியோர்கள் கருத்தைக் கேளாத குழந்தை பிறக்கும்.

ஏழாம் நாள் கூடிக் கருவானால் உண்மையை பேசும்,ஈகை,இரக்கம்,நற்குணம் உடைய குழந்தை பிறக்கும்.

எட்டாம் நாள் கூடிக் கருவானால் குழந்தை தரித்திரத்தில் வாழும்.

ஒன்பதாம் நாள் கூடிக் கருவானால் செல்வம்,வளம் நிறைந்து குபேரனாக வாழும் குழந்தை பிறக்கும்.

பத்தாவது நாள் கூடிக் கருவானால் காமம் மிகுந்து கெட்ட பழக்கம்,அவ மரணம் உள்ள குழந்தை பிறக்கும்.

பதினொன்றாவது நாள் கூடிக் கருவானால் நோயுள்ள குழந்தை பிறக்கும்.

பன்னிரெண்டாவது நாள் கூடிக் கருவானால் பல கலைகளும், அறிவு நலன்களும் உள்ள குழந்தை பிறக்கும்.

பதின்மூன்றாவது நாள் கூடிக் கருவானால் அரசியல் ஞானம், வருங்காலத்தை உணரும் விவேகம் உள்ள குழந்தை பிறக்கும்.

பதிநான்காம் நாள் கூடிக் கருவானால் உலக இன்பங்களிலிலே திளைக்கின்ற யோகியாகக் குழந்தை பிறக்கும்.

பதினைந்தாவது நாள் கூடிக் கருவானால் ஓர் அரசனுக்கு ஒப்பான ஆற்றலும், நற்புகழும் உள்ள குழந்தை பிறக்கும்.

பதினாறாவது நாள் கூடிக் கருவானால் பெரிய ஞானியாகவும், யோகியாகவும், சித்தனாகவும் ஆகக்கூடிய குழந்தை பிறக்கும்.



                    பகிர்வில் ர.சடகோபால்.BA

பில்லி சூனியம் ஏவல் இவற்றில் இருந்து பாதுகாக்க

காலம் காலமாய் மாந்திரிகம் என்பது அமானுஷ்யம் நிறைந்த ஒரு கலையாகவே இருந்து வருகிறது. இதன் உண்மைத் தன்மை பற்றிய விவாதங்கள் ஒரு புறம் இருந்தாலும், நம்பிக்கை என்கிற பெயரில் நம்மில் பலரின் நிம்மதியையும், பொருளையும் அழிக்கும் ஒரு கலையாக இருக்கிறதென்றால் மிகையில்லை...

மாந்திரிகம் என்பது அடிப்படையில் ஒரு மனிதன் தன் சக மனிதனை தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப ஆட்டுவிப்பதாகவோ அல்லது அழிப்பதாகவோதான் கருதப் படுகிறது. பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதெல்லாம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் உத்திகள். இது பற்றிய தகவல்களை முன்னரே பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன்.

அந்த வரிசையில் இன்று பில்லி, சூனியம், ஏவல் ஆகியவைகளினால் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப் பட்டதாய் கருதப் படுகிறவர்கள் தங்களை காத்துக் கொள்ளும் முறை ஒன்றினைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல்கள் கோரக்கர் அருளிய "சந்திரரேகை" எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

ஓதிடுவேன் பேய்பில்லிச்சூனி யங்கள்
ஓடுவதற்கு மந்திரங்கள் உண்மை யாக
நீதியுடன் ஓம்உம்லம்சிம் நம்வம்கிலீம்
ரீங்சிரீங் ஹிரீங் ஹரிங்கே
தீதின்றி முக்கோணம் பெரிதாய்க் கீறித்
திட்டமுடன் அஉஇ உள்ளே நாட்டிப்
பேதிக்கா வோங்காரம் சுற்றித் தாக்கிப்
பிரபலமாய் செபிக்கச் சூனியங்கள் போமே.

                                                                                        - கோரக்கர்.

இந்த பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த யந்திரத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன்.



இந்த யந்திரத்தினை மூன்றங்குல (3"x3") சதுரமான செப்பு அல்லது வெள்ளியால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். யந்திரங்களை கீறுவதற்கென தனித்துவமான முறைகள் இருக்கின்றன. அந்த தகவல்களை முந்தைய பதிவுகளில் பார்க்கலாம். அதன் படியே இந்த யந்திரங்கள் கீறப்பட வேண்டும்.

இப்போது  வெளிச்சம் நிரம்பிய, தூய்மையான அறையில் கிழக்கு நோக்கி அமர்ந்து, யந்திரத்தை வலதுகையில் ஏந்தியவாறு “ஓம் உம் லம் சிம் நம் வம் கிலீம் ரீங்சிரீங் ஹிரீங் ஹரிங்கே” என்ற மந்திரத்தை அந்தி, சந்தி வேளைகளில் 108 தடவை வீதம் மூன்று நாட்கள் தொடர்ந்து செபித்து வர பில்லி, சூனியம், ஏவல் போன்றவை எது இருந்தாலும் அது அவர்களை விட்டு நீங்கிவிடும் என்கிறார்.

தேவையுள்ளவர்கள் எளிதான செலவு பிடிக்காத இந்த முறையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

       
                   பகிர்வில் ர.சடகோபால்.BA 

செவ்வாய், 18 அக்டோபர், 2016

அஞ்சனை தேவி

இன்று நாம் பார்க்க இருக்கும் தெய்வத்தின் பெயர் "அஞ்சனா தேவி" அல்லது "அஞ்சனை தேவி". இந்த தெய்வத்தைப் பற்றிய தகவல்கள் என பார்த்தால்  அரிதாய் ஒன்றிரண்டு குறிப்புகளே எனக்குக் கிடைத்திருக்கிறது.  ஆரம்பத்தில் இந்த தெய்வம் வாயு புத்திரனான ஆஞ்சனேயரின் தாயாராக இருக்கும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதாலும், அத்தகைய குறிப்புகள் வேறெங்கும் இல்லாததினாலும் இந்த தெய்வம் வாலையைப் போல தனித்துவமான தன்மைகளையும், பண்புகளையும் கொண்டவளாய் இருக்க வேண்டும். 



சித்தர் பெருமக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் படைப்புகளின் ஊடே புராணங்களுக்கும், மிகைப் படுத்திய கதைகளுக்கும் இடமில்லை. எனது சிறிய அனுபவத்தில்  நான் பார்த்த வரையில் அவர்களின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் ஏதோ ஒரு காரணமோ, காரியமோதான் இருக்கிறது. அந்த வகையில் இந்த அஞ்சனா தேவியின் அருளை பெறுவதற்கான மந்திரத்தையும், அதை செயலாக்கும் நுட்பத்தையும் அகத்தியர் தனது "அகத்தியர் 12000" எனும் நூலில் அருளியிருக்கிறார். அந்த பாடல்கள் பின் வருமாறு.....

ஆச்சப்பா இன்னமொரு மார்க்கங்கேளு
அருளான அஞ்சனா தேவிமூலம்
பேச்சப்பா பேசாத மவுனமூலம்
பிலமான புலத்தியனே சொல்லக்கேளு
மூச்சப்பா நிறைந்தவெளி மூலாதாரம்
முத்திதரும் ஆதாரத்தில் மனக்கண்சாத்தி
காச்சப்பா ஓங்கிலியும் ரங்ரங்கென்று
கண்ணார நூறுருவிற் காணலாமே.

காணுகிற விதமென்ன மைந்தாகேளு
கற்பூர தீபஒளி சோதிபோலே
தோணுகிற போதுமனம் ஒன்றாய்நின்று
சோதியெனு மஞ்சனா தேவியென்று
பேணியவள் பாதமதைசிர மேல்கொண்டு
பிலமாக மானதாய்ப் பூசைப்பண்ணி
ஊணிமன மொன்றாக நீறுசாத்தி
உத்தமனே நித்தியமுந் தியானம்பண்ணே.

பண்ணப்பா நித்தியமுந் தியானம்பண்ண
பதிவான இருதயமே வாசமாகி
முண்ணப்பா நிறைந்ததிரு சோதிபோலே
முக்யமுடன் காணுமந்த சோதிதன்னால்
கண்ணப்பா கண்ணுமன மொன்றாய்நின்று
காணுதடா அண்டபதங் கண்ணிநேரே
உண்ணிப்பா உன்னியந்த விண்ணுமண்ணும்
ஊடுருவிப் பார்த்ததைநீ ஒண்டிக்கேளே.

ஒண்டுமிடந் தனையறிந்து அண்டத்தேகி
ஊசாடு மஞ்சனா தேவிமூலம்
நின்றுமன தறிவாலே தியானம்பண்ணி
நேமமுடன் விபூதியைநீ தரித்துக்கொண்டு
சென்றுஅந்த ஆகாச வெளியைப்பாரு
திருவான அஞ்சனா தேவிதன்னால்
கண்டுகொள்வாய் பகல்காலம் நட்சத்திரங்கள்
காணுமடா கண்னறிந்து கண்ணால்பாரே.

கண்ணாரப் பூமியைநீ நன்றாய்ப்பார்த்து
கருணைவிழிப் பார்வையினால் உண்ணிப்பாரு
பொன்னான பூமிநடுப் பாதளத்தில்
பொருளான வெகுநிதிகள் பொருந்தக்காணும்
முன்னோர்கள் வைத்தநிதி கண்டாயானால்
மோகமென்ற ஆசையைநீ வைக்கவேண்டாம்
மெய்ஞானி செய்தவத்தை நன்றாய்ப்பாரு
மெஞ்ஞான அஞ்சனா தேவிதானே.

மூலாதாரத்தில் மனதை நிறுத்தி, அஞ்சனா தேவியின் மூலமந்திரமான "ஓங் கிலியும் ரங்ரங்" என்ற மந்திரத்தினை நூறு தடவைகள் செபிக்க வேண்டுமாம். இவ்வாறு தொடர்ந்து செபித்து வந்தால் அஞ்சனாதேவி மனக்கண்ணில் ஜோதி வடிவாக காட்சி தருவாளாம். அப்போது நம் நெற்றியில் திருநீறு சாத்தி அந்த தேவியை வணங்கி, மனதால் பூசித்து மந்திர ஜெபத்தை தொடர வேண்டும் என்கிறார்.

இவ்வாறு தொடர்ந்து ஜெபித்து வந்தால், பகல் நேரத்தில் நட்சத்திரங்கள் தென்படுமாம், அத்துடன் பூமியில் பாதாளத்தில் முன்னோர் வைத்த நிதிகளும் தென்படுமாம். அப்போது  அந்த பொருட்களின் மீது ஆசை கொள்ளாமல், மெய்ஞானிகள் செய்த தவ முறைகளை எண்ணினால், அஞ்சனா தேவியின் அருளினால் அவை யாவும் கைகூடும் என்கிறார் அகத்தியர். 


                    பகிர்வில் ர.சடகோபால்.BA 

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...