சனி, 4 ஏப்ரல், 2015

அஞ்சனம்

ஜோதி விருட்சத்தின் வேர், அதன் பிசின், கஸ்தூரி, குங்குமப்பூ, கோரோசனை,பச்சைக் கற்பூரம்,புனுகு இவை வகைக்கு
 ஒரு குன்றி எடுத்து கல்வத்திலிட்டு, ஜோதி மர பட்டையின் குழித்தைலம் விட்டரைத்து , மைபோல் ஆனதும் எடுத்து கொம்பு டப்பியில் வைத்துப் பதனம் செய்யவும். ஜோதி மரத்தின் வேரை ஒரு புது சட்டியில் போட்டு கருக்கிக் கூட்டவும். ஜோதி மரத்தின் பட்டையை உலர்த்தி ஒரு மண்பானையில் போட்டு மேல் மூடி, சீலை மண் செய்து குழித்தைலம் இறக்கவும். இந்த மையை அஞ்சனா தேவி மூல மந்திரம் 1008 உரு ஜெபம் செய்து, ஒரு வெற்றிலையில் தடவி பார்த்தால் வெகு தூரத்தில் நடப்பதையும் காணலாம். இது தூர திருஷ்டி அஞ்சனம் எனப் பெயர்.

அஞ்சனா தேவி மூல மந்திரம்
                                                    " ஓம் ஸ்ரீம் ஷ்ரீம்  ஐம் க்லீம் நமோ பகவதி அஞ்சனாதேவி மஹா சக்தி சௌம் க்லீம் ஸர்வார்த்த ஸாதகி சர்வ ஜீவ தயாபரி மமகார்யம் ஸாதயா ஹீபட் ஸ்வாஹா."


                  பகிர்வில் ர.சடகோபால்.BA 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...