பாடினே நின்னுமொரு ஜால வித்தை
பண்பாக சொல்லுகிற நன்றாய் கேளு
ஆடியே இருளென்ற மூலி தன்னை
அப்பனே காப்பிட்டு பிடுங்கி வேரை
நாடியே காதிலே வைக்கும் போது
நலமாக ஒரு பொருளை சொல்லி வைத்தாற்
கூடியே யவ்வண்ண ரூபமாகும்
குணமாக வதன் பெருமை கூறக்கேளே
கேளடா புலியாவாய் கரடி யாவாய்
கெடிதான குரங்காவாய் மந்தியாவாய்
நாளடா யெருமைமுத லெருதாவாய்
நலமான ஆனையோடு நாயுமாவாய்
ஆவாய் நீ யாணாவாய் பெண்ணுமாவாய்
அப்பனே ராஜனோடு குருவுமாவாய்
தாவியே சித்தரென்ற முத்த ராவாய்
ஆமப்பா இச் ஜால சுருக்கு மெத்த
ஆரறிய போகிறா ரருமை மெத்த
காமப்பா புண்ணியருக் கெய்தும் பாரு
கன்மிகளுக் கென்னாலும் காணாதப்பா
வாமப்பா போகருட கடாஷத் தாலே
வளமாக புலிப் பாணி பாடினேனே...
- புலிப்பாணி ஜாலத்திரட்டு
பொருள்:
இன்னும் ஒரு வித்தையை சொல்கிறேன் கேள், இருளி யென்ற மூலிகைக்கு காப்பு கட்டி அதன் வடக்கே போகும் வேரை எடுத்து பத்திரப் படுத்திக் கொள்ளவும், அந்த வேரை காதில் வைத்து கொண்டு என்ன நினைக்கிறாயோ அதுவாகவே மாறலாம்.
வேரை காதில் வைத்து நீ புலியாக வேண்டும் என நினைத்தால் உருவம் பிறர் கண்களுக்கு புலியாக தெரியும். இப்படி காதில் வைத்து எந்த மிருகமாகவும் மாறலாம். ஆணும் ஆகலாம், பெண்ணும் ஆகலாம், ராஜாவாகவும், சித்தனாகவும் மாறலாம்.
இப்படி பட்ட இந்த மூலிகை பாவிகளுக்கு கிடைக்காது. இது போகரின் ஆசிர்வாதத்தால் புலிப்பாணியாகிய நான் பாடினேன்.
பகிர்வில் ர.சடகோபால்.BA
பண்பாக சொல்லுகிற நன்றாய் கேளு
ஆடியே இருளென்ற மூலி தன்னை
அப்பனே காப்பிட்டு பிடுங்கி வேரை
நாடியே காதிலே வைக்கும் போது
நலமாக ஒரு பொருளை சொல்லி வைத்தாற்
கூடியே யவ்வண்ண ரூபமாகும்
குணமாக வதன் பெருமை கூறக்கேளே
கேளடா புலியாவாய் கரடி யாவாய்
கெடிதான குரங்காவாய் மந்தியாவாய்
நாளடா யெருமைமுத லெருதாவாய்
நலமான ஆனையோடு நாயுமாவாய்
ஆவாய் நீ யாணாவாய் பெண்ணுமாவாய்
அப்பனே ராஜனோடு குருவுமாவாய்
தாவியே சித்தரென்ற முத்த ராவாய்
ஆமப்பா இச் ஜால சுருக்கு மெத்த
ஆரறிய போகிறா ரருமை மெத்த
காமப்பா புண்ணியருக் கெய்தும் பாரு
கன்மிகளுக் கென்னாலும் காணாதப்பா
வாமப்பா போகருட கடாஷத் தாலே
வளமாக புலிப் பாணி பாடினேனே...
- புலிப்பாணி ஜாலத்திரட்டு
பொருள்:
இன்னும் ஒரு வித்தையை சொல்கிறேன் கேள், இருளி யென்ற மூலிகைக்கு காப்பு கட்டி அதன் வடக்கே போகும் வேரை எடுத்து பத்திரப் படுத்திக் கொள்ளவும், அந்த வேரை காதில் வைத்து கொண்டு என்ன நினைக்கிறாயோ அதுவாகவே மாறலாம்.
வேரை காதில் வைத்து நீ புலியாக வேண்டும் என நினைத்தால் உருவம் பிறர் கண்களுக்கு புலியாக தெரியும். இப்படி காதில் வைத்து எந்த மிருகமாகவும் மாறலாம். ஆணும் ஆகலாம், பெண்ணும் ஆகலாம், ராஜாவாகவும், சித்தனாகவும் மாறலாம்.
இப்படி பட்ட இந்த மூலிகை பாவிகளுக்கு கிடைக்காது. இது போகரின் ஆசிர்வாதத்தால் புலிப்பாணியாகிய நான் பாடினேன்.
பகிர்வில் ர.சடகோபால்.BA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக