ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

பிறையதிக சித்து

பாரப்பா இன்னுமொரு சேதிகேளு 
 பண்பான பிறையதிகச் சித்து சொல்வேன் 
காரப்பா திகைப்பூண்டு தனைக்கருக்கி 
 கருவான ஏரண்டத் தெண்ணைவிட்டு 
வீரப்பா செய்யாமல் கல்வத்தாட்ட
 விபரமுள்ள மைபோல வெளிச்சம் காணும் 
சேரப்பா சிமிழ்தனிலே பதனம்பண்ணித் 
 திருவான பதிநோக்கித் திலகம் போடே 


போட்டவுடன் அமாவாசை இருட்டில் மைந்தா 
 போக்குடனே நாலு திக்கும் பார்த்தாயானால் 
நாட்டமுடன் பிறையதிக மாகத் தோன்றும் 
 நாரான மானிடர்க்கு அப்படியே காணம் 
வாட்டமுடன் இடது கண்ணை மூடிப்பார்த்தால் 
 வளமான சூரியன் போல் வரிசை காணும் 
காட்டாதே உலகிற்க்கு இந்தநூலை 
 கர்தவிதி தீர்த்தவர்க்கு காட்டு காட்டே 
                                                                           - அகத்தியர் 64 சித்துகள் 

பொருள்:
                     திகை பூண்டை கருக்கி ஏரண்டதென்னை விட்டு  கல்வத்திலாட்ட  அது மை போலாகும். அதை ஒரு சிமிழில் பதனம் பண்ணவும். அம்மாவசை இரவில் அந்த மையை எடுத்து திலகமிட நாலு திசைகளும் வெளிச்சமாக தோன்றும். இடது கண்ணை மூடி வலது கண்ணில் பார்த்தால் சூரிய வெளிச்சத்தில் பார்ப்பது போல தெரியும்...  இதுவே பிறையதிக சித்துவாகும் 


                          பகிர்வில் ர.சடகோபால்.BA 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர்

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படு...